பக்கம்:தம்பியின் திறமை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


இருக்கிறது. அதன் உதவியால் நமக்குத் தண்ணீர் கிடைக் கும். அதைப்போலவே காளிகங்கனுடைய சூழ்ச்சியை உடைத் தெறிய நமக்குத் தெரியாவிட்டாலும் மற்றவர்களுக்குத் தெரிய லாம். நான் அண்டை வீட்டுக்காரர்களிடம் பேசி வருகிறேன். நீ கவலைப்படாதே ” என்று முச்சீ கூறிவிட்டுப் போன்ை. அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு நல்ல தந்திரம் ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார்கள். ' குள்ளநரியின் தந்திரத்தை அதை விடப் பெரிய தந்திரத்தால்தான் வெல்ல முடியும். அப்படி நீ இந்தத் தந்திரத்தைச் செய்” என்று அவர்கள் சொல்லி அனுப்பினர்கள்.

முச்சீயின் கவலை நீங்கிற்று. அவன் மனவெட்டியை ஓங்கும் போதெல்லாம் கணக்கு வைக் காமல் வழக்கம்போல வேலை செய்ய லாளுன்.

ஒரு வாரம் கழித்து காளிகங்கன் திரும்பிவந்தான். முச்சீ, எங்கே உன்னுடைய கணக்கு? சரியாகச் சொல்லாவிட்டால் எருதுகள் எனக்கு சொந்தம்'என்று அவன் அதட்டினன். அதைக் கண்டு முச்சீ பயப்படவில்லை. " இதோ என் கணக்கு. நீங்கள் கங்க திங்கம் போய்த் திரும்பிவருகிற வரை யில் உங்களுடைய குதிரை எத்தனை தடவை காலெடுத்து வைத்ததோ அத்தனை தடவை நான் மண்வெட் டியை ஓங்கினேன்” என்று அவன் பதில் சொன்னன்.