பக்கம்:தம்பியின் திறமை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


பூவேலைக்காகத் தங்களை எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறேன். கல்லில் நூலுண்டாக்கிச் செய்யும் கைக்குட்டைக்கு நட்சத் திரத்தை வைத்துப் பூவேலை செய்தால்தான் நன்ருக இருக்கும். ஆகையால் நட்சத்திரத்தைப் பறித்துக் கொடுங்கள் ' என்று அவன் வினயமாகப் பதில் சொன்ஞன்.

காளிகங்கனுக்கு வாய் அடைத்துப்போய்விட்டது. அவன் ஊமையைப் போல ஒன்றும் பேசாமல் போய்விட்டான். ஆனல் அவன் உள்ளத்திலே கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

அன்று இரவு அவன் சில ஆட்களைக் கூட்டிக்கொண்டு முச்சியின் வீட்டிற்குள் நுழைந்தான். உறங்கிக்கொண்டிருந்த முச்சீயின் கைகளையும் கால்களையும் கட்டினர்கள். அவனுடைய தாயார் அவர்களுக்கு மத்தியிலே புகுந்து தடுக்க முயன்ருள். காளிகங்கனும் அவனுடைய ஆட்களும் சேர்ந்து அவளே அடித்தனர்; அவள் மூர்ச்சைபோட்டுக் கீழேவிழுந்தாள். பிறகு முச்சீயைத் தூக்கி வரும்படி காளிகங்கன் கட்டளை யிட்டான். எருதுகளை ஒட்டிக்கொண்டுவரும்படியும் சொன்னன்.

முச்சீயை ஒரு மலைச்சிகரத்திற்குத் தூக்கிச் சென்ருர்கள். அங்கே அவனைப் படுக்கவைத்து அவன் தூங்கும்போது கீழே உருட்டித் தள்ளிவிட வேண்டும் என்பது காளிகங்கனது எண் ணம். அதற்காக அவனை மலையுச்சியிலே ஒரு செங்குத்தான பாறையின் ஓரத்தில் கிடத்தினர்கள். அப்பொழுது அவன் விழித்துக்கொண்டிருந்தபடியால் அப்படியே விட்டுவிட்டுக் காளி கங்கனும் அவனுடைய ஆட்களும் ஒய்வு எடுத்துக்கொண்டார் கள். இரண்டு ஆட்கள் ஒரு பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள்ளே உணவுப்பொருள் கள் இருந்தன. அவற்றைக் கொண்டு அந்த இரண்டு பேரும் விருந்து தயார் செய்யத் தொடங்கினர்கள்.

காளிகங்கனுக்குப் பெரிய தொந்தி இருந்தது. அதனுல் மிகவும் சிரமப்பட்டு மலையேறினன். அவன் உடம்பெல்லாம் வலித்தது. களைப்பினுல் அவன் அப்படியே படுத்துத் துங்கிப் போய்விட்டான். அவன் தூங்குவதைக் கண்டு, மற்ற ஆட் களும் அப்பொழுது தயாராக இருந்த உணவைத் தொடாமல் பாத்திரங்களிலே வைத்து விட்டுத் தூங்கலாஞர்கள்.