பக்கம்:தம்பியின் திறமை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


விழுந்தவுடனே அந்தத் தேவதை தோன்றி என்னை அத னுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்றது. ஏராளமான நவரத்தினங்களையும், தங்க நகைகளையும் எனக்குக் கொடுத்தது. அவற்றை யெல்லாம் என்னுல் எடுத்துக்கொண்டுவர முடிய வில்லை. இந்தத் தாயத்தை மட்டும் கொண்டு வந்தேன்' என்று கூறிவிட்டு அவன் தாயத்தை எடுத்துச் சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும்படி ஆட்டிக் காண்பித்தான். பேராசைக்காரனை காளிகங்கனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது.

"நான் போனல் எனக்கும் கிடைக்குமா?" "பணக்காரர்களுக்குத்தான் அங்கு நல்ல வரவேற்புக் கிடைக்குமாம். நீங்கள் போனல் ஆற்றுத் தேவதைக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும்'.

முச்சீ இவ்வாறு கூறியதைக் கேட்டதும் காளிகங்கனுக்கு உற்சாகம் பொங்கிக்கொண்டு வந்தது. பாலத்தில் இருந்து தன்னை ஆற்றுக்குள்ளே தள்ளும்படி முச்சீயை வேண்டிக் கொண்டான். முச்சீ அவன் விரும்பியவாறே செய்து முடித்தான். இதைக் காண்பதற்காக காளிகங்கனுடைய உறவினர்களும், நண் பர்களும் அங்கே ஓடிவந்தார்கள். காளிகங்கனுக்கு மட்டும் நிறையப் பொருள் கிடைக்கப்போவதை நினைத்து அவர்களுக்குப் பொருமை உண்டாயிற்று. அதை உணர்ந்துகொண்ட முச்சீ "நீங்கள் கவலைபப்ட வேண்டாம். அவரால் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வரமுடியாது. ஆற்றில் முழுகியதும் அவர் கைகளை ஆட்டி உங்களையெல்லாம் வரும்படி சைகை காட்டு வார். நீங்கள் விரும்பினுல் நீங்களும் ஆற்றில் குதித்து வேண்டிய பொருளை எடுத்துக்கொள்ளலாம்' என்று அவன் தெரிவித்தான். காளிகங்கன் ஆற்றில் வீழ்ந்ததும் ஏமாற்றம் அடைந்தான். அங்கே ஆற்றுத் தேவதை வரவில்லை. ஆற்றுவெள்ளம்தான் வாயிலும் மூக்கிலும் ஏற ஆரம்பித்தது. தான் ஏமாந்துபோன தை அவன் உணர்ந்தான். தன்னைக் காப்பாற்றும்படி கைகளை ஆட்டி ஆட்டி எல்லோரையும் அழைத்தான். வாய்க்குள்ளே தண்ணீர் புகுந்ததால் அவளுல் பேசமுடியவில்லை. அவன் கைகளை வேகமாக ஆட்டுவதைக் கண்டதும் உறவினர்களும், நண்பர்களும் சற்றும் தாமதம் செய்யாமல் ஆற்றிலே குதித்