பக்கம்:தம்பியின் திறமை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

வைத்திருந்த சுரைக்காய் விதை ஒன்றைக் கீழே போட்டது. பிறகு வெளியே பறந்து சென்றது.

இந்தாப்பாட்டி மிகுந்த மகிழ்ச்சியோடு விதையைக் கையில்

எடுத்துக்கொண்டாள். தன் வீட்டிற்குப் பின்னலிருந்த காலி யிடத்தில் அதை முளைக்கப் போட்டாள்.

அதிலிருந்து உண்டான செடியில் சுரைக்காய் ஏராளமாகக் காய்த்தது. காய் வெகு ருசி. கிழவி சிட்டுக்குருவியை நினைத் துக்கொண்டே காய்களைச் சமைத்துச் சாப்பிட்டாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் கரைக்காய் வழங்கினுள். எல்லோ ரும் அதைத் தின்று சந்தோஷப்பட்டார்கள்.

ஒரு பெரிய காயை மட்டும் இந்தாப்பாட்டி செடியிலிருந்து பறிக்கவில்லை. விதைக்காக அதை அப்படியே விட்டு வைத் திருந்தாள். அது நாளடைவிலே நன்ருக முற்றிக் காய்ந்து பக்குவமாகத் தொங்கிற்று. அதன் பிறகுதான் கிழவி அதைப் பறித்து வீட்டுக்குக் கொண்டு போளுள். அது மிகவும் கனமாக இருந்தது. காய்ந்துபோன சுரைக்காய் லேசாக இருக்கும். ஆளுல் இது கனமாக இருப்பதைக் கண்டு கிழவி ஆச்சரிய மடைந்தாள். சுரைக்காயின் மேல்பாகத்திலே வட்டமாக அறுத் தெடுத்தாள். ஆகா, என்ன அதிசயம் உள்ளே நிறைய அரிசி இருந்தது.

இந்தாப்பாட்டி அரிசியைக் கீழே கொட்டினள். கொட்டக் கொட்ட சுரைக்காயில் அரிசி திறைய இருந்துகொண்டே