பக்கம்:தம்பியின் திறமை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

புத்தி கூர்மையுடையவன் என்பதை அவர்களுக்கு நன்றாக விளங்கும்படி செய்து அவனிடத்திலே அன்போடு இருக்கச் செய்யவேண்டுமென்று அவள் ஆசை கொண்டாள்.

அவள் ஒரு நாள் தன் மகன்களை அருகில் அழைத்து “உங்கள் எல்லோருக்கும் வயது வந்து விட்டது. இனிமேல் நீங்கள் கலியாணம் செய்து கொண்டு தனித்தனிக் குடும்பமாக வாழவேண்டியவர்கள். அப்படி வாழ்வதற்கு முன்னால் நமது நாட்டை விட்டு அடுத்த நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்து உலக அனுபவம் பெற்று வரவேண்டும். அப்படிச் செய்தால் அறிவும் வளரும். உங்களுடைய புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கும்" என்று .சொல்லி அவர்களுக்கு வேண்டிய பொருள் கொடுத்து அனுப்பினாலள்.

ஐந்து பேரும் சேர்ந்தே சுற்றுப்பிரயாணத்தை நடத்தினர்கள். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல்முத்துவைப் பற்றி இழிவாகப் பேசுவது தான் மற்றவர்களின் வேலை.