பக்கம்:தம்பியின் திறமை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கொண்டு வந்திருக்கிருய் ?' என்று எத்தன் கேட்டான். "மூட்டை நிறைய உருளைக்கிழங்கு இருக்கிறது' என்ருன் தசுக்கன். "என் மூட்டை நிறைய வேர்க்கடலை இருக்கிறது. இரண்டு பேரும் மூட்டைகளை மாற்றிக் கொள்வோமா?' என்று மெல்ல ஆரம்பித்தான் எத்தன். தசுக்கன் உடனே சம்மதம் தெரிவித்தான். இரண்டு பேரும் மூட்டைகளை மாற்றிக் கொண்டு குதுகலத்தோடு அவனவன் வீட்டிற்குப் போனுர்கள்.

வீடு சென்றதும் தசுக்கன் ஆவலோடு முட்டையை அவிழ்த்துக் கீழே கொட்டினன். மூட்டையில் அரைப்படி வேர்க்கடலைகூட இல்லை. உடனே அவன் எத்தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான். எத்தனும் இதே போல ஏமாற்ற மடைந்து தசுக்கன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். இருவரும் பாதி வழியில் சந்தித்தார்கள். ஒருவன்மேல் மற்ருெருவன் குற்றம் சாட்டத் தொடங்கினன். இதற்குள் நன்ருக இருட்டி விட்டது. இருட்டிலே நெடுநேரம் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கடைசியில் அவர்கள் இரண்டு பேருக்கும் வாய்வலி எடுத்துக் கொண்டது. தொண்டை கம்மியது. 'தம்பி, நாம் சமாதான