பக்கம்:தம்ம பதம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் மூன்று

சிந்தனை

33. காப்பதற்கும், அடக்குதற்கும் அரிதான சபல சித்தத்தை அறிவாளி, வேடன் தன் அம்பை நிமிர்த்துவது போல, நோக்குகிறான். (1)

34. தண்ணீரிலிருந்து வெளியே தரையில் எடுத்தெறியப்பட்ட மீன் துடிப்பதுபோல், (ஆசை காட்டும் தீய) மாரனின் பிடியிலிருந்து தப்புவதற்காக நமது சித்தம் துடிக்கின்றது. (2)

35. அடக்குவதற்கு அரிதாயும், துடிப்புள்ளதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அடக்குதல் நல்லது; அடக்கியாளப்பெற்ற சித்தம் சுகமளிக்கும். (3)

36. அறிவதற்கு அரிதாயும், மிக நுணுக்கமானதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அறிஞன் காத்து வர வேண்டும்; காக்கப் பெற்ற சித்தம் சுகமளிக்கும். (4)

37. நெடுந்தூரம் தனியே சஞ்சரிப்பதாயும், உருவமற்றதாயும் இதயக்குகையுள் அமர்ந்துள்ள சித்தத்தை அடக்கியாள்பவர் மாரன் பிடியிலிருந்து விடுபட்டவராவர். (5)

38. நிலையில்லாத சித்தத்தையுடையவரும், உண்மையான தருமத்தை அறியாதவரும், மனத்தின் சாந்தி குழம்பியவரும் பூரண ஞானத்தைப் பெற முடியாது. (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/21&oldid=1381780" இலிருந்து மீள்விக்கப்பட்டது