பக்கம்:தம்ம பதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் ஐந்து

பேதை

60. விழித்திருப்பவனுக்கு இரவு நெடிதாகும்; களைத்திருப்பவனுக்கு வழி நெடுந் தூரமாகும்; நால்லறத்தை அறியாத மூடருக்கு (ஜனன-மரணமாகிய) ஸம்ஸாரத்தொடர் எல்லையற்றதாகும். (1)

61. (ஸம்ஸார) யாத்திரையில், ஒருவன், தனக்கு நிகரான அல்லது மேலான நண்பன் துணைக்குக் கிடைக்கா விட்டால், தன்னந்தனியே தொடர்ந்து செல்வானாக; மூடனுடைய துணை உதவியாகாது. (2)

62. ‘என் பிள்ளைகள், என் செல்வம்' என்ற சிந்தனையால் மூடன் துயரப்படுகிறான். அவனே அவனுக்குச் சொந்தமில்லை! பிள்ளைகளும் தனமும் எப்படிச் சொந்தமாகும்? (8)

63. பேதை தன் மடமையை உணர்ந்தால், அந்த அளவுக்கு அவன் அறிவுள்ளவன்; தன்னைப் பண்டிதனாக எண்ணிக்கொள்ளும் பேதை முழு மூடனேயாவான். (4)

64. அகப்பை குழம்பின் சுவையை அறியாது; அது போல் வாழ்நாள் முழுவதும் பேதை ஞானியோடு பழகி வந்தாலும், தருமத்தை அவன் அறிவதில்லை. (5)

65. நாக்கு குழம்பின் சுவை அறிகிறது; அதுபோல் கருத்துள்ளவன் சிறிது நேரம் ஞானியோடு பழகினாலும், அவன் தருமத்தின் இயல்பைத் தெரிந்து கொள்கிறான். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/26&oldid=1381790" இலிருந்து மீள்விக்கப்பட்டது