பக்கம்:தம்ம பதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 ☐ தம்ம பதம்

82. தரும உபதேசங்களைக் கேட்டறிந்த ஞானிகள், ஆழமாயும் தெளிவாயும், அமைதியாயமுள்ள ஏரியைப் போல், சாந்தியடைகிறார்கள். (7)

83. நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை; இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை. சுகமோ துக்கமோ வந்தால், ஞானிகள் எழுச்சியடைவதுமில்லை; அயர்வு கொள்வதுமில்லை. (8)

84. தனக்காகவோ மற்றவர்க்காகவோ, புத்திர ஆசை, பொருளாசை, இராஜ்ய ஆசை (பிரபுத்துவத்தில் நாட்டம்) ஆகிய ஆசைகளில்லாமல், அதரும வழிகளில் இன்ப வாழ்வை அடைய விரும்பாமல் வாழ்பவன் ஒழுக்கமுள் உரவோனாயும், ஞானியாயும், அறநெறிச் செல்வனாயும் இருப்பவன் . (9)

85. மனிதர்களில் மிகச் சிலரே (நிருவாண மோட்சமாகிய) அக்கரையை அடைகின்றனர்; மற்றவர் எல்லோரும் (ஜனன-மரண ஸம்ஸாரமாகிய) இக்கரையிலேயே உழன்று திரிகின்றனர். (10)

86. தரும உபதேசத்தைக்கேட்டு, அதன்படி நடப்போர் மறு கரையை அடைவர் -கடத்தற்கு அருமையான எமலோகத்தையும் கடந்து செல்வர். (11)

87.ஞானி இருள் வழியை நீக்கி ஒளியின் நெறியில் செல்வானாக, வீட்டை விட்டு விரும்புவதற்கு அரிய விவேகத்தை நாடித் துறவு வாழ்க்கையின் ஏகாந்த இன்பத்தில் அவன் திளைப்பானாக. (12)

88. காமிய இன்பங்களைக் கைவிட்டு, எதையும் தனதென்று கொள்ளாமல், ஞானி மனமாசுகளை அகற்ற வேண்டும்; அந்நிலையில் அவன் ஆனந்தமடைவான். (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/30&oldid=1361930" இலிருந்து மீள்விக்கப்பட்டது