பக்கம்:தம்ம பதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞானி ☐ 29


89. ஞானத்திற்கு உரிய (ஏழு) அங்கங்களில் [1] சித்தத்தை நிலை நிறுத்தி, எதிலும் பற்று வைக்காமல், ஆசைகளை அடக்கி வென்று எவர்கள் மாசற்ற ஒளிமயமாய்த் திகழ்கிறார்களோ, அவர்கள் இந்த உலகிலேயே நிருவான மோட்சத்தை அடைகிறார்கள். (44)



  1. ஏழ அங்கங்கள்-ஞானத்தை அடைவதற்குரிய ஏழு கருவிகள்; சாமர்த்தியம், ஞாபகம், மனனம், திரி பிடக சாத்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சம திருஷ்டி என்பவை. இவைகளை 'ஸப்த போத்தியங்கங்கள் ' அல்லது 'ஸம்போதி அங்கம்’ என்பர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/31&oldid=1361940" இலிருந்து மீள்விக்கப்பட்டது