36 () தம்ம பதம்
120.
124.
என் பக்கம் அண்டாது' என்று புண்ணியத்தை இலேசாக எண்ண வேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணிராலேயே குடம் நிரம்பிவிடும். ஞானி கொஞ்சம் கொஞ்சமாகப் புண்ணியத்தைச் சேர்த்தாலும் அவன் புண்ணியத்தால் நிரம்பி விடு கிறான். * : (7)
போதிய வழித்துணை யில்லாத வணிகன் மிகுந்த பொருளுடன் பயமுள்ள பாதையிலே செல்ல மாட்டான்; வாழ்வில் ஆசையுள்ளவன் விஷத்தை விரும்பமாட்டான்; இவர்களைப்போலவே, ஞானி பாவச் செயல்களை விலக்க வேண்டும். (8)
கையில் புண் ணில்லா தன் விஷத்தைக் கையால் தொடலாம்; புண்ணில்லாதவனை விஷம் பாதிப்ப தில்லை. திய காரியத்தைச் செய்யாதவனைப் பாவம் பாதிக்க து. - 9)
நிரபராதியான ஒருவனுக்கு எவன் திங்கு செய்தா லும், பாவமற்ற பரிசுத்தமான ஒருவனுக்கு எவன் திங்கு செய்தாலும், காற்றுக்கு எதிராகத் தூவிய மண் மேலேயே வந்து சாடுவது போல், அந்த மூடனைப் பாவம் பற்றிக்கொள்கிறது. (10)
சிலர் கருக்குழியை அடைந்து (மறுபடி) -* பிறக்
கிறார்கள்; பாவ கருமத்தைச் செய்தவர்கள் நிரயத்தை அடைகிறார்கள்; நற்கருமத்தைச் செய்தவர்கள் சுவர்க்கத்தை அடைகிறார்கள்;
ஆஸ்வங்களை ஒழித்த பற்றற்றவர்கள் பரிநிரு வாணத்தை அடைகிறார்கள். (11)