பக்கம்:தம்ம பதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 ☐ தம்ம பதம்

றனர். பிறரைத் துன்புறுத்துவோன் முனிவன் அல்லன்: பிறரை இகழ்பவன் துறவி அல்லன் (6)

183. நிந்தனையை ஒழித்தல், பிறரை வருத்தாமலிருத்தல் அறத்திற்கு[1] அடங்கியிருத்தல், நிதான உணவு, ஏகாந்தமாயிருந்து உயர்ந்த சிந்தனைகளில் ஒருமைப் பட்டிருத்தல்–இதுவே புத்தருடைய உபதேசம். (7)

184. பொற்காசுகளை மழையாகப் பொழிந்தாலும், ஆசைகள் அடங்காமற் பெருகும். ஆசைகளின் படி அனுபவித்தல் அற்ப இன்பம் என்றும், பின் விளைவு துக்கம் என்றும் அறிந்தவன் ஞானியாவான். (8)

185. பூரண ஞானம் பெற்ற புத்தருடைய சீடன் ஆசைகள் அனைத்தையும் அழிப்பதிலேயே இன்புறுவான்; வானுலக இன்பங்கள் கூட அவனுக்கு உவப்பானவை அல்ல. (9)

186. பயங்கொண்ட மனிதர்கள் மலைகளையும், வனங்களையும், புனிதமான மரங்களையும் புண்ணியத்தலங்களையும் புகலிடமாகக் கொள்கிறார்கள். (10)

187. இந்த அடைக்கலம். நல்ல பாதுகாப்பு அல்ல. இந்த அடைக்கலத்தால் மனிதன் வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை. (11)

188. ஆனால் புத்தரையும், சங்கத்தையும், கருமத்தையும் சரணமடைதலில் நான்கு உன்னத உண்மைகளைத் தெரிந்த ஞானத்தால் தேர்ந்து கொள்கிறான். (12)


  1. அறம்-பௌத்த தருமம். இதனை விளக்கும் நூல் ‘பாதிமோக்சும்’ என்பது; வடமொழியில், பிரதி மோக்ஷம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/50&oldid=1357844" இலிருந்து மீள்விக்கப்பட்டது