பக்கம்:தம்ம பதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களிப்பு ☐ 51

202. ஆரோக்யகே பரம லாபம்;

திருப்தியே பரமதனம்;
விசுவாசமே பரம பந்து;
நிருவாணமே பரம சுகம்.

(8)

203. ஏகாந்தத்தின் இன்பத்தையும், அமைதியின் இன்பத்தையும் நுகர்ந்த பிறகு, ஒருவன் தர்மத்தின் இன்பத்தைப் பருகும்போது, பயமும் பாவமும் விலகுகின்றன. (9)

204. நல்லாரைக் காண்பது நன்று; அவரோடு இணங்கியிருப்பது எப்போதும் இன்பம். மூடர்களைப் பாராமலே யிருப்பவன் எப்போதும் இன்பமாயிருப்பான். (10)

205. மூடனுடன் குலாவுவோன் நெடுங்காலம் துன்புறுவான். மூடரோடு குலாவுதல் பகைவருடன் பழகுவதைப்போல, எப்போதும் துக்கந்தான். அறிவாளரின் இணக்கம் சுற்றத்தாரோடு பழகுவதைப் போல் இன்பமே பயக்கும். (11)

206. ஆதலால் நட்சத்திர மண்டலத்தின் வழியைச் சந்திரன் பின்பற்றுவதுபோல, ஞானியாயும், பேரறிவாளனாயும், கல்விமானாயும், பொறுமையுடையோனாயும், கடமை உணர்ந்தோனாயும், மேலோனாயும் உள்ள மகானையே ஒருவன் பின்பற்ற வேண்டும். (12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/53&oldid=1357891" இலிருந்து மீள்விக்கப்பட்டது