இயல் பதினேழு
கோபம்
2
2
0.
2
2
2
o:23.
கோபத்தை விடு, செருக்கைக் கைவிடு, உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. நாம-உருவங் களில் தொடர்பற்றவனுக்கு, எதையும் எனது' என்று கொள்ளாதவனுக்குத் துக்கங்கள் ஏற்படுவ தில்லை. - (1)
வழிதவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றைக் (கையில்) வைத்திருப்பவர் களே . (2)
வெகுளியை விநயத்தால் வெல்லவேண்டும்: தீமையை நன்மையால் வெல்லவேண்டும்; கருமியை ஈகையால் வெல்லவேண்டும்; பொய்யனை மெய்யால் வெல்லவேண்டும். (3)
சத்தியமே பேசு, வெகுளிக்குப் பணியவேண்டாம், யாசிப்பவர்க்கு இயன்றதைக் கொடு-இந்தமூன்று வழிகளாலும் ஒருவன் தேவர்களுடைய சந்நிதியை நிச்சயம் அடையலாம். (4)
முனிவர்கள் அஹிம்சையோடு இருப்பவர்கள், எப்போதும் உடலைக் கட்டுக்குள் வைத்திருப்ப வர்கள். அவர்கள் நிலையான இடத்தை அடைவார்கள்; அடைந்த பின்பு அவர்கள் வருந்து வதில்லை. (5)