10 (-) தம்ம பதம்
'. தன பாலகன் என்ற பெயருள்ள யானையானது மத நீர் பொழியும் காலத்தில் அடக்கமுடியாத தாகிறது. கட்டிவைத்தால், அது ஒரு கவளம் (உணவு) கட்ட உண்ணாது. அதன் நினைவெல் லாம் யானைகள் வசிக்கும் வனத்திலேயே இருக் கும் - (5}:
323. மலத்தைத் தின்று வரும்பெரும் பன்றியைப்போல்,
ஒருவன் உடல் கொழுத்துப் பெருந்தீனியில் பற்றுள்ளவனாகி, நீங்காத சோம்பலிலும் நித்திரை யிலும் ஆழ்ந்து, படுக்கையிலே புரண்டுகொண்டி ருந்தால், அந்த அறிவிலி திரும்பத் திரும்பப் பிறவி யெடுக்க நேருகிறது. i (6)
324. முற்காலத்தில் எனது மனம் தன் விருப்பம் போல் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. யானை மதம் கொள்ளும்போது பாகன் அங்குசத்தால் அதனை அடக்குவதுபோல, இப்போது என் மனத்தை நான் அடக்கியாள்வேன். (7)
- 25. கருத்தில்லாமல் இருக்கவேண்டாம்; மனத்தில்
சிந்தனைகளை அடக்கிக் காக்கவும், சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போலத் தீய வழியிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க. (8)
- 26. அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப்பழகக்
கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்க முடையவனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில், எல்லா இடையூறுகளையும் கடந்து, அவனுடன் கருத்தோடும் மகிழ்ச்சியோடும் நட்புக் கொள் Կ) III II III Ա . (9)