பக்கம்:தயா.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54 * 恋air களைத் தாமே நிறையக் காண்பது ஆண்களுக்கே உரிய வரம் என்று நினைக்கிறேன். 'எல்லாம் எங்களால்தான்' என்று கத்திக் கத்தி நாங்கள் காணும் வாய் வெற்றிக்கு அவர்கள் காட்டும் நேர்த்தியான மெளனத்தை மழுங்குனி மாங்கட்டைத்தனம் என்று ஏசி, நாங்கள் எங்கள் ஆத்தி ரத்தைத் தீர்க்கப் பார்க்கிறோம். :- - அப்பா, இப்போ உங்களைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையாயிருக்கு தெரியுமா? இத்தனை சந்தடியிடையே அப்பா ஒரு தரம் வட்டணம் போயும் வருகிறார். 'ஆப்பா, மன்னியைக் கண்டேனா எப்படி யிருக்கி றாள்' 'மன்னியா அது யாருடா மன்னி கலியானத்துக்கு முன் னாலேயே கண்டாகிற உறவு?” அம்மா, பருப்புத் தேங்காய்க்கு பாகைக் கிளறிக் கொண் டே, ஆமாம், இப்பவே அழைச்சுப் பார்த்துப் பழக்கிக்க வேண்டியதுதான். சிலருக்கு அக்கான்னு கூப்பிட்டால் பிடிக் காது. நாலு பேருக்கு நடுவே பிறந்து வளர்ந்திருந்தால்தானே தெரியப் போகிறது? போன இடத்தில் கர்ப்பிணியாய் ஒரு பெண்ணையும் நீங்கள் பார்க்கல்லியா?” "சரிதான், அங்கே ரெண்டு மூணு பேர் பிள்ளையார் வேஷம் போட்டிண்டிருந்தா. யாரென்று நான் கண்டேன்! இதென்ன பிள்ளையாண்டிருக்கிற "சீஸனா?” விநாயக சதுர்த்தி வரதே அதனாலா?” அம்மாவுக்குக் கன்னம் கதுப்பாடுகிறது, "பாலா, போயும் போயும் உங்கப்பாக்கிட்டே வாயைக் கொடுக்கிறையே! ஏதாவது கேட்டால் ஏதாவது ஒரு பதில் இே.ஷன் ரத்தத்தில் ஊறிப்போர்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/170&oldid=886291" இலிருந்து மீள்விக்கப்பட்டது