பக்கம்:தயா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி 169 வண்டியை விட்டிறங்குகிறோம். ஆனால் வீடு வெறிச் சென்றிருக்கிறது. வாசவில் கோலமில்லை. செம்மண் இல்லை. ஆரத்தியுடன் காத்திருப்பார் யாருமில்லை. உள்ளே போவதா? வாசலிலேயே நிற்பதா? ஒன்றுமே புரியவில்லை. "அம்மா!' அம்மா உள்ளிருந்து வருகிறார். இருகைகளிலும் சற்று நீள வாகில் ஒரு மூட்டையை ஏந்தியபடி நேரே என்னிடம் வந்து அதைக் கொடுக்கிறார், என் திகைப்பில் என்னென்று புரியாமலே வாங்கிக் கொள்கிறேன். சுற்றிய துணியிலிருந்து முஷ்டித்த இரு பொம்மைக் கைகள் நெளிகின்றன. அம்மா கன்னங்களில் கண்ணிர் வழிந்து கொண்டே யிருக் கின்றது. உதடுகள் நடுங்குகின்றன. துன்னி!’ என் பக்கத்திலிருந்து கிளம்பிய வீறல் என் கணவருடைய குரலாகவே தெரியவில்லை. அவர் வாயினின்று ஒரு பகதி பறந்து போன மாதிரி எனக்குத் தோன்றிற்று. பிறகே அவர் பாடிக் கேட்டதாகவே எனக்கு ஞாபக மில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/175&oldid=886296" இலிருந்து மீள்விக்கப்பட்டது