பக்கம்:தயா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தயா குழியில், உதட்டோரங்களில் குறு குறுப்புத் தாங்க முடிய வில்லை, 'எக்ஸ்க்யூஸ் மி-' வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டே வெளியே ஓடினான். படிக்கட்டில் தடதடவென இறங்கி, இடை வேளையில் சாப்பிடும் அறைக்குப் போய் விலாவைப் பிடித்துக் கொண்டு இடி இடி என்று சிரித்தான், கண்கள் வடிந்தன. ஏன் இந்தச் சிரிப்பு, இவ்வளவு சிரிப்புக்கு என்ன நடந்தது என்று தனக்கே விளங்கவில்லை. ஆனால் அந்த சிரிப்பைச் சிரித்துத் தீர்த்தபின்தான் இம்சை சற்று அடங்கிற்று. இடத்துக்குத் திரும்பி வந்தபோது, சிரித்த அசதியில் மூச்சு லேசாய்த் திணறிற்று, - H. C, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "எங்கே போயிட்டீருங்காணும்? உம்முடைய சமாதானத்தை எழுதி வாங்கச் சொல்வியிருக்கார். ஏனய்யா காலங்காத் தாலே வந்ததும் வராததுமாய் அவனைச் சீண்டிவிட்டு அவன் குணத்தைக் கெடுத்து, எங்களை நாள் முழுவதும் கதிகலக்க அடிக்கிறீர்! நாங்கள் எல்லாம் சம்சாரிகளப்யா! எங்கள் பிண்டத்தைப் பெருங்காயமாக்கி விடாதேயும்!" மறுபடியும் விழியோரங்கள் குறுகுறுத்தன. H.C.க்கா பிண்டம் பெருங்காயம்? H.Cக்குப் பட்டணத்திலேயே நாலு வீடுகள் இருக்கின்றன. பொங்கலுக்கு சுண்ணாம்பு கூட அடித்துத் தரமாட்டார். வாடகையை மாத்திரம் கறுக்காய் மாதா மாதம் மூணாந்தேதியே வசூல் பண்ணி விடுவார். ரெண்டு பிள்ளைகள் வியாபாரத்தில் சக்கை போடு போடு கிறான்கள், தவிர நிலபலம். மாமனார் வீட்டு சொத்து ஸ்வீகார சொத்து எல்லாம் வரவிருக்கின்றன. வீட்டுக் கணக்குகளைக் கவனிக்க தனி ஆளே போட்டிருக்கிறார். S. E. க்கே கடன் கொடுத்திருப்பதாக ஆபீஸில் சொல்லிக் கொள்கிறார்கள், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/60&oldid=886361" இலிருந்து மீள்விக்கப்பட்டது