பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13



'இத்தனை கேள்விகளை ஒரேயடியாகக் குவித்தால் எப்படிப் பதில் சொல்வதென்று எனக்கே புரியவில்லை. ஆகவே, ஒவ்வொன்முகப் பதில் சொல்லுகிறேன்' என்று சிரித்துக்கொண்டே கூறினர் வடிவேலு.

"மாமா, ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் உங்களுக்கு நூறு மார்க்' என்றான் சுந்தரம். மாமாவிடத்தில் சுந்தரத் திற்குப் பிரியம் அதிகம். அ வ ரு க் கு ந் தா ன் சுந்தரத்திடம் மிகுந்த பிரியம். அதனால் தாராளமாக இப்படிப் பேசிக்கொள்வார்கள். அவர்கள் மனம் விட்டுப் பேசாத பேச்சே இல்லை எனலாம்.

'அத்தைக்குச் சில மாதங்களாக உடம்பு சரியில்லை என்பது உனக்குத் தெரியும். தரங்கம்பாடி சோழ மண்டலக் கரையில் உள்ளது. தரங்கம் என்றாலே அலைகள் என்று அர்த்தம். அங்கே ஒஸோன் நிரம்பிய காற்று சதா வீசிக்கொண்டேயிருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது. அதனாலே அங்கே போகப்போகிறோம்.'

"அப்பா, தரங்கம்படிக்குப் போனால் எதற்காகச் சமையல் செய்து பழகிக்கொள்ளவேண்டும்?' என்று சந்தேகத்தோடு கேட்டாள் கண்ணகி.

'உனக்கு எப்போதும் சந்தேகம்தான். சமையலும் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? அது பீம பாகமாக இருக்குமோ, நளபாகமாக