பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17



மிருந்து- அதை வாங்கி ஜின்கா தோளில் மாட்டிக் கொண்டு அடிக்கடி அதன் வழியாக உற்றுப் பார்த்துக் ஆச்சரியப்பட்டுக்கொண்டே நின்றது. அதுவே ஒரு வேடிக்கையாக இருந்தது. அது தானும் ஒரு துப்பறியும் நிபுணன் போலப் பாசாங்கு செய்வதைப் பார்த்து மூன்று பேரும் கைதட்டிச் சிரித்தார்கள். ஜின்கா, அவர்கள் சிரிப்பதைக் கண்டு, காரணமில்லாமல் ஜிங்ஜிங்கென்று குதிக்கலாயிற்று. மூவரும் மீண்டும் கொல்லென்று ைக த ட் டி ச் சிரித்தார்கள். வடிவேலுவும் வள்ளிநாயகியும் இந்தச் சிரிப்பில் கலந்துகொண்டார்கள்.