பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தரங்கம்பாடிக்கு பஸ்ஸில் பயணம்


ரியாக பஸ் நிலையத்திற்குக் காலை எட்டு மணிக்கே சென்றுவிட்டார்கள். பஸ் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தாலும் தங்க மணிக்கோ சுந்தரத்திற்கோ கண்ணகிக்கோ இருப்புக் கொள்ளவில்லை. அவர்கள் அவசரத்தைப் பார்த்து வடிவேலுவும் தம் மனைவியுடன் முன்னதாகவே புறப்பட்டார்.

அப்படி முன்னதாகப் புறப்பட்டதும் நல்லதாகப் போயிற்று. ஏனென்றால் ஜின்காவை ஏற்றிக்கொள்ளு வதற்கு முதலில் ஆட்சேபம் தெரிவித்தார் க ண் ட க் ட ர். 'குரங்குபுத்தி-அது மற்ற பிரயாணிகளை என்ன செய்யுமோ? அந்தப் பொறுப்பு நமக்குவேண்டாம். குரங்கு பேனைப் பார்த்தாலும் பார்க்கும், தலையைக் கடித்தாலும் கடிக்கும்" என்று ஆட்சேபணை செய்தார் கண்டக்டர்,