பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22



இருந்தது. அதனால் ஒருவர் ஒரு மாலையே வாங்கிப் போட்டுவிட்டார்! அந்த அளவிற்கு ஜின்கா அனைவரையும் கவர்ந்துவிட்டது.

நேராகத் தரங்கம்பாடிக்கோட்டையை அடைந் தனர். அப்பொழுது இருள் சூழ்ந்துகொண்டிருந்த சமயம். வள்ளிநாயகிக்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒரு தனி அறையை ஏற்பாடு செய்திருந் தார்கள். மற்றயாவரும் ஒரு பெரிய அறையில் தங்கினார்கள். இவ்வளவிற்கும் ஏற்பாடு செய்திருந் தார் வடிவேலு நண்பரான தரங்கம்பாடி சப்இன்ஸ் பெக்டர் திரு. முத்துசாமி. அவரும் பஸ் நிலையத் திற்கு வந்து தமது கல்லூரி நண்பரான வடிவேலுவை அன்புடன் வரவேற்றார்.

இதையெல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண் டிருந்த ஜின்கா, வருகின்றவர் மிக முக்கியமானவர் என்பதை உணர்ந்து, ஜிங்ஜிங்கென்று குதித்து அவரிடம் சென்று, ஒரு போலீஸ் ஜவானைப்போல ஒரு சலாமே செய்தது.

முத்துசாமி ஜின்காவை அன்புடன் தட்டிக் கொடுத்தார்.

'ஒரு மாத காலம் தங்கி நன்றாக ஒய்வு எடுத்தால் இந்தத் தரங்கம்பாடியில் வீசம் ஓஸோன் காற்றே ரத்தச் சோகையை எல்லாம் போக்கிவிடும். தைரியமாக இருங்கள்' என்று வள்ளிநாயகியைப்