பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42



'ஒழுகை மங்கலம் என்று பக்கத்தில் புகழ் பெற்ற ஒரு கோயில் இருக்கிறது. அங்கே திருவிழா என்றும் அறிகின்றேன். பல வேடிக்கைகள் நடக்கும் என்பதனால் அங்கே சென்றிருக்கிறாள் என்று கூறி விடலாம்' என்றார் பேராசிரியர்.

'கண்ணகியைக் கடத்திக்கொண்டு போய் இருப்பதன் நோக்கம் என்ன என்பதுதான் விளங்க வில்லை. என் மூளை குழம்பியிருக்கிறது. சரியாக ஆலோசனை செய்ய முடியவில்லை என்று ஒப்புக் கொண்டான் தங்கமணி.

'இதற்கெல்லாம் நீ அஞ்சக்கூடாது. சாதாரண மாக, ஜிப்ஸிகள் பெண்களைக் கடத்திக்கொண்டு போவார்களே ஒழிய, அவர்களுக்குத் துன்பம் நேரும் வகையில் நடந்துகொள்ள மாட்டார்கள். உயிருக்கு ஆபத்து ஒன்றும் வந்துவிடாது. கவலைப்படாதே. இப்படித் துப்புக் கண்டுபிடிப்பதில் பல சம்பவங்கள் நேரும். ஆகையால் அவற்றைப்பற்றிக் குழப்பமோ கலக்கமோ கொள்ள வேண்டியதில்லை' என்று அமைதியாகச் சொன்னார் பேராசிரியர் வடிவேலு.

அவருடைய அமைதியான தோற்றத்தைக் கண்டு தங்கமணிக்கே ஆச்சரியமாக இருந்தது.

"ஆனால் கண்ணகியை மட்டும் கடத்திக்கொண்டு போவதற்குக் காரணமென்ன? கடத்திக்கொண்டு போவதானல் சுந்தரத்தையும் கடத்திக்கொண்டு