பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46



தந்தை வடிவேலுவும் மிகப்பெருமையடைந்தார். உடனே, மாசிலாநாதர் கோயிலில், தங்கமணியும் மற்ற இரண்டு இளைஞர்களும் ஆராய்ச்சி நடத்துகின்ற இடத்திலே, மூன்று நான்கு போலீஸ் ஜவான்களை எச்சரிக்கையாகக் காவலிருக்கும்படியும், ஜிப்ஸிகள் இரவில் வந்தால் அவர்களைக் கைது செய்து வைக்கும் படியும் ஆணையிட்டுவிட்டு, ஒழுகை மங்கலம் மாரியம்மன் திருவிழாவுக்குத் தமது ஜீப் காரில் விரைந்தார் சப் இன்ஸ்பெக்டர். அவரோடு துப்பாக்கி ஏந்திய மூன்று நான்கு போலீஸ் ஜவான்களும் உடன் சென்றார்கள். இப்பொழுது அவருக்கே இந்த எதிர்பாராத நிகழ்ச்சிகளால் மிகுந்த அக்கறை உண்டாகிவிட்டது. துப்புக் கண்டுபிடிக்க வேண்டு மென்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.