பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 நம்மை ஒன்றும் செய்துவிடாது. ஏனென்ருல், நமக் குள்ளாக நாம் செமித்து வைத்திருப்பது சிறுவியாதி கள்தாம்! இங்குள்ள இனிப்புப் பண்டங்கள் அசல் நெய்யினல் செய்யப்பட்டவை அல்ல!’ என்று ஒரு போர்டு தொங்கவிடப்பட்டிருக்கும். அசல் நெய் எங்கே கிடைக்கிறது?-டூப்ளிகேட் நெய்யே பர வாயில்லை என்று பலகாரங்களை வாங்குகிருேம், பல காரங்களையும் சேர்த்து! அங்கு போலிகளைக் கண்டு ஏமாருதீர்கள்!' என்று மீண்டும் ஒர் அறி விப்பு நம்மை எச்சரித்து, அடியில் ஒரு காப்பித்துள் கம்பெனியின் விளம்பரம் சிரிக்கிறது. போலி எது, அசல் எது?” என்று ஆராய்ச்சிசெய்யும் தலைவலியை -அல்ல்து, தலைவிதியை காப்பித்துTள் ஆராய்ச்சி யாளருக்கே விட்டுவிட்டு, நாம் அங்கிருந்து நகர் கிருேம் எச்சில் இலைகளை இங்கே போடவும்' என்ற இடத்தைவிட்டு விலக்கி, அங்கங்கே எச்சில் இலைகள் மிதந்துகிடக்க, நாம் ஜாக்கிரதையாக வெளியேறி, வழியில் நந்தியாக மறித்திருக்கும் கல்லாவில் பில்லை யும் காசையும் கொடுத்துவிட்டு நடக்கிருேம். பெரிய சுவர். அங்கே இங்கு நோட்டீஸ் ஒட் டக்கூடாது!’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் இடத்தை பலவகைச் சுவ ரொட்டிகளும் 'அண்ணு. வாழ்க!'- எங்கள் ஒட்டு காங்கிரசுக்கே! என்ற வாசகங்களும் மங்கி யும் மங்காமலும் ஒளிரும். இதில் விசேஷம் என்ன வென்ருல், அந்த எச்சரிக்கை வெறும் எச்சரிக்கை யாகவே சிரஞ்சீவியாக மிளிர்ந்து கொண்டிே யிருக்கும்.