இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
வெள்ளையர்களைக் கப்பல் ஏற்றி அனுப்பு முன்னம் நம் தேசீய மகாகவி பாடினார்.
“வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம், அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!”
வாழ்க்கையை அலையெறிகடலுக்கு ஒப்பிட்டுச் சொல்வது மரபு.
இதோ வாழ்க்கையைக் கப்பலுக்கும் ஒப்பிட்டுச் சொல்லலாம்.
கப்பல் பயணம் எவ்வளவு பயம் செறிந்ததாக இருந்தாலும், கப்பல் பயணம் வெற்றி பெற்றுவிட்டால் அது மகிழத்தக்கதொரு சாதனையே அல்லவா? அதுபோலத்தான் இம் மண் வாழ்வும்!
இல்லையா?
ஆகவே, கப்பலுக்கு வாழ்த்துக் கூறுகின்றேன்!