பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திசூடியைப் பற்றியோ, அல்லது, தமிழ் மூதாட்டி ஒளவையைப் பற்றியோ நான் அறிந்து கொள்ளுவதற்கு முன்னதாகவே வைகறைத் துயிலெழு!’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்து விட்டது. இந்த ஒருவரிப் பாட்டின் பொருள் இன்னதாகத்தான் இருக்க வேண்டும் என்று கணிக்கின்ற அளவுக்கு அப்போது என் அறிவு வளர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், என் வயதும் வளர்ந்திருந்தது. என்னுடைய இந்தப் பக்குவ நிலை’க்கு மூலாதாரமாக இருந்தவர் என் தந்தை யென்று தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். - -