பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& யணன்-வாசவதத்தை என்று இப்படி அழகழகான பெயர்கள் ஜோடி காட்டி, ஜோடி சேர்ந்து, அழைப் புக்களின் மேலுறைகளின் இடது பக்கம் கண்சிமிட் டின. ஓரிரு பெயர் இணே எனக்குத் தெரிந்தவை யாகத் தோன்றின. மற்றப் பெயர்களுக்கு என்னைத் தெரிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நான் பெருமைப்பட வேண்டியவன்தான்! அழைப்புக்களே மீண்டும் மேலோட்டமாகக் கண்ணுேட்டம் செலுத் தினேன். கடிகாரம் எச்சரித்தது. அலுவலகக் கடமை குறுக்கே நின்றதால், வந்த திருமண மடல் களின் மணம் வெளியேறிவிடாமல் இருக்க, அவற் றைப் பையிலிட்டேன். - காலம் நிற்கின்றதா? மாலை வந்தது. அந்திமாலைப் பொழுது. மாலே நோய்க்குப் பதிவு செய்துகொண்டிருந்தவர்களது வண்ணக் கதைகளை நினைவுபடுத்திக்கொண்டே வீட்டுக்கு வந்தால், முதலில் பட்டு நின்றது. வண்ணம் மங்கிய ஒரு கல்யாண இதழ், கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த பழைய மணத் தம்பதியின் பெயர்களின்மீது தங்கத் தூள் துவப்பட்டிருந்தது. அந்தப் பெயர்கள் இரண்டை யும் தொடுத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண் டிருந்த எனக்குச் சுவை கண்ட ஒரு நிகழ்ச்சி ஞாப கத்திற்கு வந்தது! - . அவனும் அவளும் ரிசர்வ் செய்து வைத்த மாதிரி, கண்டவுடனேயே காதல் கொள்ளவில்லை.