பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சிரஞ்சீவி இன்னாருக்கும் செளபாக்கியவதி இன்னவளுக்கும் நடக்கும் விவாஹ சுபமுகூர்த்த வைபவத்திற்கு நம்மைக் குடும்ப சமேதராக வந்து போகும்படி வேண்டிக்கொள்வதோடு நிற்காமல், திருமணத்திற்கு நாலுநாள் முன்னதாக வரும்படி ‘ஸ்பெஷலாக’ விண்ணப்பு வரி ஒன்றையும் வேறு மாமூலாகச் சேர்த்து அச்சடித்து அனுப்பி வைப் பார்கள். கல்யாணக்காரர்களுக்கு வசதியும் இஷ்டமும் இருந்தாலும் இருக்காவிட்டாலும், அச்சகத் தாருக்கு இம்மாதிரியான ‘மாட்டர்’தான் கைவசம் காத்திருக்கும். ‘கல்யாணத்தைச் செய்து பார்’ என்ற அபாய அறிவிப்பில் தொக்கி நின்று கண்ணு மூச்சி காட்டும் அபாயங்களுள் இதுவும் ஒன்றென் பதை நீங்கள் மறந்துவிடப் போகிறீர்கள்!

ஆனல், ரேஷன் கெடுபிடி காலத்தில், நாலு நாள் முன்னதாக வருமாறு அழைக்க அரசாங்கச் சட்டம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமா? திருமணத்திற்கு வரும்போது, அவரவர்களின் பங்கீட்டுச் சீட்டுகளையும் கொண்டு வரும்படியல்லவா அவரவர்களுக்குக் ‘கெஞ்சல்’ மொழி அனுப்பப்பட்டு வந்தது? இது கனவல்ல; கதையுமல்ல!

எனக்கு இந்தத் திருமண அழைப்புக்கள், பயிற்சிகளையும் பாடங்களையும் கற்றுத் தந்திருக் கின்றன என்பதை நான் உங்களிடம் ஒளிவு மறைவாக வைத்துக் கொள்ள விரும்புவது அத்தனை உசிதமல்ல!