பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مجتمع مجي يمر بعيمي " ، " : بيه

YSAS SSAS SSAS SSAS SSAS AMS ee S

விரைவாக வரக்கூடிய காலத்தை வக்கீல்கள் எதிர் பார்க்கிருள்கள். ஒரே நாள் இரவில் சீனர் எல்லோ ரும் பன்றிக் குடுமி'யை நறுக்கி எறிந்தனர். ஐந்நூறு வருஷத் தாவுதலை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவிவிட்டது. ஆளுல், இந்தச் சித்பூர் ரஸ்தாவில் மழை பெய்தால் சேறு உண்டாகாமற் செய்ய வழி யில்லே. அதன் ஸ்திதிக்கு மாறுதல் இல்லை. காங் கிரஸ் என்ற பெயர் உண்டாவதற்கு முன்பு நமது ஜாதிப்பாட்டு எ த் த னை சோகமாயிருந்ததோ, அத்தனை சோகமாகத்தான் இப்போது ஸ்வராஜ்யம் நெருங்கிவரும் தருணத்திலும் இருக்கிறது.

குழந்தைப் பிராயமுதலாகவே நாம் பழகிவிட்ட படியால், இதெல்லாம் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆகவே, கவலை ஏற்படவில்லை. தண்ணிர் தங்கி ஓயாமல் செப்பனிட்ட ட்ராம் தண்ட வாளத்தில் என்னுடைய வண்டிச் சக்கரம் போகும் போது, எனக்கு மறதி தெளிந்து ஜனங்களின் போக் குக்கும், நீரோட்டத்துக்கும் சண்டை உண்டாய் அதிலிருந்து அழுக்குத் தண்ணிர் என்மேல் வந்து தெறிக்கும் செய்தியிலே புத்தி செல்லுகிறது. இதை நாம் ஏன் பொறுக்கிருேம்? என்று சிறிது காலமாக எனக்கொரு யோசனை உண்டாய் வருகிறது.

இதைப் பொறுக்க வேண்டுமென்று கட்டாய மில்லை. பொறுக்கக் கூடாதென்று தீர்மானிப்பதால் அனுகூலமுண்டு அதற்கு ஐரோப்பியர்கள் வாஸம் செய்கிற செளரிங்கி ரஸ்தா சாr), அந்த ரஸ்தா வில் முக்கால் பங்குக்கு மேலே ட்ராம் தண்டவாளத் தைப் போட்டு, அதில் முடிவில்லாமல் யானை நடை: யில் செப்பனிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீதி யார் ட்ராம்வே அதிகாரிகளுக்கு ஊணுறக்கம் இல் வாதபடிச் செய்துவிடுவார்கள். நாமோ, கீழ்ப்படி தலாகிய குணமே வடிவெடுத்து வந்திருப்பதால்,