பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தத்தில் குதிரை வெறி 115

இணைத்தார். படகுக்கு நாங்கள் சார்லட் மோர்ஸ் எனப் பெயரிட் டோம். எங்கள் இருவருக்குமே அச்சம் எழுப்பிய, மனுேதிடம் பெற்ற இரு பெண்மணிகளின் பெயர் அது. படகின் வெள்ளோட் உத்தின் போது, கொக்கோ-கோலா உடைத்து அதன் மீது ஊற்றினுேம். தாத்தா சிறிது கடுமையான திரவத்தை தன்னுன் ஊற்றினர். நல்ல விஸ்கியைப் படகின் மீது ஊற்றிப் பாழாக்கும் பண்பினர் அல்லர் அவர். .

நான் என்றாவது பணக்காரனுல்ை, எனக்காக ஏதோ ஒரு படகு வாங்கிக் கொள்வேன். ஆயினும் சார்லட் பெற்ற தீர அனுபவங்களை அது ஒருபோதும் அடையப் போவதில்லை. என்றும் அவை பெரிய சர்கசங்களாக இருந்ததில்லை. பணத்தீவில் புதையலைத் தேடினேன். வெயிலால் காய்ந்து கருகினேனே தவிர, காசுகளைக் கண்டேனில்லை. படகிலிருந்து தவறி விழுந்தேன். அதை மணல் திட்டுகளில் சிக்க வைத்தேன். நங்கூரத்தை நழுவ விட்டு அது செல்கையில், அவ்வப்போது அதன் பின்னே தான் நீச்சலடிக்க நேர்ந்தது. அதிலிருந்து சுட்டேன் ; மீன் பிடித்தேன்; அத்துடன் வழிதவறித் திரிந்தேன் ; அதனருகே நீரில் மூழ்குவதற் கிருந்தேன். ஆயினும் நான் கூறியது போல, அது எனக்குச் சில தீரச்செயல்களையும் அளித்தது. வேடிக்கைப் புத்தகங்களில் கான முடியாத சாகசங்கள். அவற்றில் ஒன்றேனும் ஈடு செய்ய முடியாதது. அதாவது, முன்னரே வேறு எவரேனும் சிறப்பாகச் செய்து முடித்தவற்றிலிருந்து நாம் கிளர்ச்சி பெறுவதையே குறிப்பிடுகிறேன்.

அந்தப் படகில் நான் தனித்திருக்கையில், பொழுது போக்கு பற்றிய கவலையே எனக்கு எழாது. கடற் கொள்ளைக்காரர்களைத் தேடும் காப்டன் பிளட் ஆக நான் மாறுவேன். அல்லது, நான் நிஜமாகவே பொக்கிஷத் தீவில், லாங் ஜான் வில்வரிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருப்பேன். நியூஸிலாந்துக்கு அப்பால் மீன் பிடிக்கும் வேலன் கிரேயும் நானே. அல்லது, ஸ்பானிஷ் ஆர்முடா வில் நான் ஒரு பகுதி. அல்லது நானே ஹாக்கின்ஸ் அல்லது ட்ரேக். எப்போதாவது, சின்னத் தீவில் தனியேயிருந்து பிரைடேயைக் கான அ லை யு ம் ராபின்சன் குரூலோவாக இருப்பேன். அந்தப் புத்தகங்களை எல்லாம் நான் என்ளுேடு எடுத்துச் சென்று, உணவுக்காகப் படகை சின்னஞ்சிறு மணல் தீவுகள் ஒன்றில் சேர்க்கும்போது படிப்பது வழக்கம். அவை பள்ளிக்கூடத்தில் நான்கு - கண் - உபாத்தியாயர் எவராவது கண்காணித்து நிற்க, படித்தாக வேண்டிய புத்தகங்கள் என்ற பட்டியலின்படி கட்டாய மாக வாசித்தபோது தந்த இன்பத்தைவிட அதிகமான சுவையை இப்போது அளித்தன.

தனக்குத் தானே பொழுது போக்கு ஏற்படுத்துவதன் மூலம் ஒருவன் எவ்வளவு வேடிக்கை பெற முடியும் என்பதையும், தாம் சரியாக அனுபவித்தால் தனிமை கூட எத்தகைய கிளர்ச்சி