பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடையின் இன்பம் 139

இதர விஷயங்களோடு, விளையாட்டுக்குப் பிறகு குடிவெறி அதிகம் கலந்துவிட்ட தென்றும் சிகாகோவில் நல் நடத்தை சீர் குலைந்ததற்கு அதுவும் ஒரு வழியில் பொறுப்பாகும் என்றும் அவர் கருதினர்.

ஆயினும், தாத்தா தனது மதுபானத்தை விரும்பியதைவிட, ஒரு மதுவில் அதிக ஆசை கொண்ட மனிதன் ஒருபோதும் இருந்த தில்லை. நாம் வேட்டையாடினல், வேட்டையை மட்டுமே கவனிக்க வேண்டும்; கதகதப்புக்குக் குடிப்பது முடிவில் வர வேண்டிய விஷயமே தவிர, நடுவில் அல்ல என அவர் கருதினர். மீன்பிடிப்பு வேலை அல்லது பேஸ்பந்து, எதற்கும் இதே நியதி தான். முகாம் கூட்டங்கள் விதிவிலக்கு. ஏனெனில் அங்கு மதுவினல் துண்டப்படுதல் கேளிக்கையின் ஒரு அம்சமாகும் என அவர் எண்ணிஞர்,

ஞாயிற்றுக்கிழமை ; அன்று யாரும் எவ்விதத் தமாஷாம் அனுபவிக்கக் கூடாது; வீட்டில் அமர்ந்து, பெருந்தீனி தின்று, பிற்பகலில் பொழுது போகாத உணர்வோடும் உண்ட கிறக்கத் தோடும் திணற வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று எங்கள் ஊரில் இருந்தது. தாத்தா பலமான விதிவிலக்கு ஆவர். நன்னுரலே அவர் முற்றிலும் கற்றிருப்பதாகவும், ஞாயிறு அன்று தொழில் புரிவதை அது ஆட்சேபிப்பது உண்மை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனல் ஒருவன் தனது ஒய்வு நாளைத் தன் இஷ்டம் போல் பிறருக்குத் தொந்தரவோ, அவர்களது துண் உணர்வுகளுக்கு இடைஞ்சலோ அளிக்காத விதத்தில், கழிப்பதில் அவர் தவறு எதுவும் கண்டாரில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் மிகச் சிலரே சொந்தக் கார் வைத் திருந்தார்கள். டி மாடல் அல்லது லோக்கோ மோபைலில் குடும்பம் பூராவையும் திணித்து, ஞாயிறு மாலை உலா ’’ என்ற பெயரில் களைப்பு தரும் பயணம் போவது மிக அநாகரிகமான வழக்கங்களில் ஒன்றாக விளங்கியது. வயது முதிர்ந்தவர்களோடும், வயோதிக ஸ்திரீகள் ஞாயிற்று உடை என அணிந்த கருநிற சோகமயப் பட்டாடை வீசும் புழுங்கிய நாற்றத்தோடும் பிரயாணம் செய்வது சிறுவருக்குச் சித்திரவதையே யாகும்.

சாப்பாடு முடிந்ததும், மெதுவாக நழுவி, நாங்கள் மீன் பிடிக்கப்போகும் சமயமும் அதுதான்.

இது ஞாயிரு, புதன என்பது மீனுக்குத் தெரியாது. மீனுக்கு எல்லாம் ஒன்றே, நாம் விற்பதற்காக மீன் பிடிக்காத டிரையில்-அதுதான் வேலையாகும்-ஞாயிற்றுக் கிழமையை ஒழுங்காசார நியதிகளின்படி சும்மா விட்டுவைக்கிருேம் என்று கொள்ளலாம்._ காரில் சுற்றுவதை விட, எல்லோருக்கும் பித்து அளித்துவரும் கோல்ப் ஆடுவதில் பகலைக் கழிப்பதை விட, அல்ல விழித்தபடி இருப்பதற்காக வெறுமனே வீட்டைச் சுற்றுவதைவி