பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 செப்டம்பர் கீதம்-2

என்னைப் போன்ற சின்னத் துஷ்டனுக்குக் கூட, செப்டம்பரில் பள்ளிக்கூடத்துக்குத் திரும்புவதன் மூலம் சில தினங்கள் வேடிக்கை கிட்டும். மூன்று மாத காலம் நாம் பார்த்திராத பல பேரைக் காணலாம், கால் பந்து விளையாட்டு துவங்கும். வேறு நகரிலிருந்து வந்து சேர்ந்த ஒன்றிரண்டு அழகிய பெண்கள் வகுப்பில் காணப்படுவர். சில புதிய பையன்களும் இருப்பர். அவர்களை நம் மாதிரி மாற்றுவதற்குச் சிறிது காலமும், பள்ளி நேரம் முடிந்த பின் சிறு குத்துச் சண்டையும் தேவைப்படும்.

து அழகான நல்ல செப்டம்பர். ஏதோ தற்செயல் நிகழ்ச்சி யாக நான் ஒரு வகுப்பைத் தாண்டி விட்டேன். இப்போது இலக்கணப் பள்ளியில் நான் பெரியவன்.--நன்கு மூத்தவன் என எண்ணினேன். எனக்கு அடுத்தாற் போல், ரோஸ் எல்லன் என்கிற வெகு அழகான பொது நிறப் பெண் ஒருத்தி இருந்தாள். முதல் நாளே அவளிடம் காதல் கொண்டு விட்டேன். இது மிக முக்கியமானதல்ல. ஏனெனில் ஆரம்பப்பயிற்சி முதலே தான் காதல் கொள்ளத் தொடங்கினேன். அதிவிருந்து ஆண்டு தோறும் இரண்டு மூன்று தடவைகள் காதலால் பீடிக்கப்படுவ துண்டு. அந் நாட்களில் நான் ஏகப்பட்ட புத்தகங்கள் சுமந்தேன். அவ்வருடம் எனக்கு இரட்டைக் காதல். ஏனெனில், செங் கூந்தல் அழகி, தேமல் முகத்தாள், புதிய உபாத்தியாயினி, * மிஸ் கேரி மே நைட் எனும் பெயரினுள், தன் தரத்தில் மிக் குயர்ந்தாள் ஒருத்தி வந்திருந்தாள். இளம் குற்றவாளிகள் பற்றி இந் நாட்களில் அதிகம் கேள்விப்படுகிருேம். ஆனல் இங்கு நான் சொல்கிறேன், ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கேரி மே நைட் இருந்தால், சிறுவர்களைப் பொறுத்தவரை எவ்விதத் தொல்லேயும் ஏற்படாது என்று.

இந்த நைட் அம்மாள் மாதிரி ஒரு பெண்ணே நீர் பார்த் திருக்கவே முடியாது. தன்னை விட வயதில் மூத்த பையன்களுக்கு, அவள் கற்றுக் கொடுத்தாள் என்பதை நீர் மறக்கக்கூடாது. அவளுக்கு வயது பத்தொன்பது தான். நாட்டுப்புற மாணவர் களில் சிலருக்கு இருபது வயதாகி யிருந்தது. அவர்கள் ஒரு வகுப்பில் சேர்ந்து, அங்கேயே தங்கிவிடுவார்கள்.

நாம் செய்யும் எதையும், நம்மால் செய்ய முடிந்ததை விடச் சிறப்பாகவே மிஸ் கேரி மே நைட் செய்து முடிப்பாள். கால்பந்து கோஷ்டிக்கு அவள் பயிற்சி அளித்தாள். கால் சட்டை அணிந்து திரிந்த்தன் மூலம் பள்ளித்தலைவருக்கு அபசாரம் செய்தாள்.