பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் ரேனும்

போகும் சமையல்காரன் தொழிலான அது இந் நாட்களில் இல்லை. அனுதாபத்துக்கு உரியது. இது. அந்தச் சமையல்காரன், அவனே வேலைக்கு அமர்த்துகிறவர்களுக்குச் சமமான நடத்தை உள்ளவனுகவே இருப்பான். அதாவது காட்டில் இஷ்டம் போல் திகியவும், அருமையான வாய்ப்பேச்சைக் கேட்கவும் சந்தர்ப்பம் கிட்டுமானுல் அவன் நிலையாக உழைக்கவே மாட்டான். பொது வாக அவன்-மித மின்றியும், அடிக்கடியும்-குடிப்பது வழக்கம். அதனுல் அவன் வீட்டுச் சமையல்காரனுகத் தகுதியற்றவன் என மதிக்கப்பட்டான்.

அவர்களில் அநேகரை எனக்குத் தெரியும். சிறையிலிருந்து

வெளிவந்த ஒரு கொலைகாரன் தான் அவர்களில் சிறந்தவன். அவன் எப்பொழுதாவது எங்கள் குடும்பத்தில் வேலை செய்வது உண்டு. அவன் பெயர் போய்விட்டது. ஆனல் காட்டில் மாயாவியாக விளங்கினுன் அவன். சில பாறைகளையும் ஒரு இருப் புச் சட்டியையும் வைத்து அவன் சில வேலைகள் செய்வான். ஒக் கள்ளிகளையும், மணம் ஊட்டுவதற்காக ஹிக்கரிக் கட்டை களையும், அடுப்பில் திணிப்பான், பிறகு சட்டியிலிருந்து கிடைக்கும் மானிறைச்சித் துண்டுகள் நம் வாயில் நீர் ஊற வைக்கும். மானிறைச்சி சமைப்பதற்குக் க டி ன ம | ன து. ரொம்பப் பேர் அதை மென்மையாக்க அதையும் இதையும் ஊற்றி, பதப்படுத்த ஜெல்லிகளையும் ஒயினையும் கொட்டி, அதிக நேரம் செலவிடுவர். ஆணுல் இந்த ஆசாமியோ அதை வெறுமனே நெருப்பு:மீது வைப்பான் ; பிறகு வெளியே தூக்குவான் ; சுடச்சுட அதைத் தட்டில் போடுவான். அது ஆறும் வரை பொறுத்திருக்க முடியாது நம்மால். ஆகவே நாம் நமது தாக்கைச் சுட்டுக்கொள்வோம். உண்ணி மாதிரி நிறைந்த வயிந்ருேடு படுக்கச் செல்லும் நான் அதற்குள்ளாகவே மறுநாள் காலே ஆகாரம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவேன்.

ஆகாரத்துக்கு பொரித்த முட்டைகளில் செய்த த் தயாரிப்பு ஏதாவது இருக்கும்-அவன் எப்பொழுதும் ஒரு இரும்புக் கொப்பரையைச் சுமந்து செல்வான். ஒரு நாய் சாப்பிடும் எதையும் இரும்புப் பொரிக்குஞ்சட்டி தவிர வேறு அம் பொசிக்க முடியாது என அவன் சொன்னுன்-வேக த மான் ஈரலும், வெண்ணெய் தடவி வாட்டிய ரொட்டித் துண்டுகளும் வழக்கமாக இருக்கும். எல்லோருக்கும் பசி ஆதிகமிருந்தால், அணில் கறித் துவுட்டல் கிடைக்கலாம். ஹோ கேக்குகளும் அவன் செய்வான். சோள மாவு, தண்ணிர், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சாம்பவில் சுட்டெடுப்பான். சாம்பலத் தட்டி_விட்டுத் தின்றால், ஒவ்வொரு துண்டும் மிகுந்த பரவசமூட்டும். செங்கண் பன்றியின் கொழுப்பில் அல்லது முதுகுக் கறியால் சுவைபெற்ற பானத்தில் தேர்ய்த்துத் தின்றால், பிரமாதமாக இருக்கும். -