பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவானைக் கனவானே காண்பார்

என்றார். நான் துப்பாக்கியை மேலே உயர்த்தி, முடுக்கினேன். அது பயங்கர ஓசையோடு வெடித்தது எனக்கு ஏற்பட்ட பவத் தால் நான் அதைக் கீழே போட்டேன். -

‘அஹஹஹ் ‘ என்று தாத்தா குத்தலாகச் சொன்னர் : “ துப்பாக்கியை வெறுமெனச் சுடுவதற்கு முன்பு அதில் குண்டு இருக்கிறதா இல்லையா என்று கவனிக்க உனக்கு அறிவு இருக்கு மென்று நினைத்தேன். அப்படிச் செய்திருந்தால் நீ கவனிக்காத வேளையில் நான் குண்டை உள்ளே போட்டுவிட்டேன் என்பதைப் பார்த்திருப்பாய். இப்போது உன் செய்கையால் நீ என்னையோ, நாய்களில் ஒன்றையோ சுட்டிருக்கக்கூடுமே.”

முதல் பாடத்துக்கு அது முடிவு கட்டியது. இப்பொழுது நான் எவ்வளவோ வளர்ந்து விட்டேன். ஆயினும் அன்று தாத்தா என்னிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியதையும், அதிலிருந்து குண்டை அகற்றியதையும், எனக்கு எச்சரிக்கை உண்டாக்குவதற். காக் நான் அறியாதவகையில் மீண்டும் அதைத் துப்பாக்கியில் போட்டதையும் நான் மறக்கவேயில்லை. இர்ண்டு மூன்று விஷயங் களைச் செய்து காட்டி அவர் உணர்த்திய அந்தப் பாடத்துக்கு உலகத்திலுள்ள வார்த்தைகள் அனைத்தும் இணையாக முடியாது. நாங்கள் வீடு திரும்பியபோது அவர் வேறொரு விஷயமும் சொன்னர் : வயதாக ஆக, நீ அதிக எச்சரிக்கை அடைவாய். என்னவ்வளவு வயது ஆகிறபோது, துப்பாக்கியிடம் உனக்குப் பயம் ஏற்பட்டு விடும். அதனுல் ஒவ்வொரு இளைஞனும் உன்னை உருப்படாத கிழவி என்று சொல்வான். ஆளுல் உருப்படாக் கிழவிகள், வாத்து வேட்டையின் போது நண்பர்களின் தலைகளைச் கடமாட்டார்கள். அல்லது ஒரு மான் பதுங்கிய புதருள் சுட்டு விட்டு, பிறகு அங்கு போய் மார்பில் குண்டு அடிபட்டுக் கிடக்கும் அருமை நண்பனைக் கண்டெடுக்கவும் மாட்டார்கள்.”

நாங்கள் வீடு சேர்ந்து, தாத்தாவின் அறையை அடைந் தோம். அவர் கணப்புத் தீயைக் கிளறிவிட்டு, உள் அறை ஒன்றுள் சென்று, பழைய மது நிறைந்த ஒரு புட்டியை எடுத்து வந்தார். அரை கிளாஸ் மது ஊற்றி உறிஞ்சினர். உதடுகளைச் சுவைத்தார். - .

பெரியவனைதும் நீ புகை பிடிக்கவும், மது குடிக்கவும் ஆரம்பிப்பாய். பெரும்பலர் இதைச் செய்கிரு.ர்கள். ஆளுல், வேட்டை முடிந்து வீடு சேர்ந்ததும் துப்பாக்கியைச் சுத்தம் செய்து அதன் இடத்தில் வைத்தபின் நெருப்பருகே அமர்ந்து குடிப்பதனால் யாரும் அடிபடப்போவதில்லை. நீ உன் துப்பாக் கியை சுத்தப்படுத்துவது இருக்கட்டும். இன்னும் நீ அதைக் கழட்டி வைக்கவில்லை என்று தெரிகிறது. குழந்தையின் கைக்கு எட்டும்படி, அல்லது நாய் கீழே தள்ள வசதியாக அது ஒரு மூலையில் நிற்கிறது. இப்பொழுதே அதை நீ துடைக்க வேண்டும். அதன் மூலம் அதில் குண்டுகள் எதுவுமில்லை என்பது உனக்குப்