பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.3% தசத்தாவும் பேரனும்

இது இழிவான தத்திரம் ஆளுல், இந்த அம்மா அழைப்பு மூலம், வழி தவறிய சிறு காத்தை நீ எப்பொழுதும் உன்னிடம் கூப்பிடமுடியும். அவை பெரிய வாத்துக்களேவிட, தின்பதற்கு ருசியானவை ‘’ என்றார் தாத்தா.

தாத்தா, அவர் காலத்தில், உயிருள்ள ஏய்ப்புகளைக் காட்டி வேட்டையாடி இருக்கிறார். அன்று அது சட்ட பூர்வமானதே, சகதியில் ஊன்றிய ஒரு கம்பில் ஒரு பெண் மல்லார்ட் வாத்தைக் கட்டுவார். அது ஒரு ஸ்திரியைவிட அதிகமாக உரையாடும். தன் வால் மீது நின்று சிறகுகளை அடித்துக் கொண்டு, ஆகாயத்தில் செல்லும் கூட்டங்களை நோக்கிக் காதல் மொழி பேசும், அவை வேகமாகத் திரும்பி, கால்கள் தொங்க சிறகுகளை உயர்த்திக் கொண்டு கீழிறங்கும். செயலற்ற கால்களோடும் சிறகுகளோடும் தண்ணீரை நோக்கிப் பாய்கிற கொழுத்த மல்லார்ட் அல்லது ஊசிவால் வாத்து போன்ற வெகு சுலபமான குறி வேருென்றும் கிடையாது. - -

நல்லது. காற்று நீரைப் பேய்க் குழம்பாகக் கலக்கியது. வாத்துக்கள் நிறைய வந்தன. நாங்கள் சுட்டுத் தள்ளினுேம். சந்தேகமின்றி, மல்லார்டுகள் மிக அழகானவைதான். ஆனல் தாத்தா ஊசிவால்களைத்தான் அதிகம் போற்றினர். ‘மஞ்சன் பாதங்களும், சிறகுகளில் படிந்த சகல வர்ணங்களும், சுளுகுப் பாறை போன்ற பெரிய மஞ்சள் அலகும் பெற்ற ஃபிரஞ்சு வர்த்து பகட்டானதே. ஆளுல் நாம் அதை நம்ப முடியாது, அது சேற்று மடு வாத்து அதற்குப் போதுமான தானியம் கிடைக்காவிட் டால், வயதான மீன் திண்ணி மெர்கான்ஸர் போல, அதுவும் வயிற்றுக்கோளாறு வரும் வரை மீன்களைத் தின்னும். ஊசிவாலன் அப்படி அல்ல. அது அணிந்துள்ள கண்ணியமான உடைகளைப் பூார். மல்லார்டோ நாட்டியசாலைக் கூத்தாடிபோல் காட்சி தரு கிறது. ஊசிவாலன் மீன் தின்பதை நீ ஒருபோதும் காண முடி யாது. ஆதைவிடப் பட்டினி கிடக்கும் ஆது’ என்று.அவர்சொன் ஞர்,

கித்தான்முதுகு வாத்து பற்றி நீ நிறையப் படித்திருக் திருய். அது எனக்குத் தெரியும். தின்பதற்கு அது எவ்வளவு நேர்த்தியானது என்றும், காட்டின் இந்திப் பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் பெரிய விருந்துகளில் கித்தான்முதுகையும், டெர்ராப்பின் வாத்தையும் தவிர் வேருென்றையும் தின்ன்மாட்டார்கள் என்றும் படித்திருக்கிறாய்,

ஆனல், மீன் தின்னும் விஷயத்தில் மல்லார்ட் வாத்திடம் உள்ள

ஒழுக்கம்தான் இந்தப் பழைய டப்பாக்களிடமும் உண்டு. நான் பூரணமாக சிபாரிசு செய்யக்கூடிய ஒரே ஒரு பெரிய வாத்து ஊசி வாலன்தான் சின்ன வருத்துக்களில், மீன் தன்மை பெற்ற டிலே நான் இதுவரை தின்றதில்லை. உண்மையைச் சொல்வதானுல், தரப்பட்டு விஷயத்துக்கு டில் வாத்தைவிடச் சிறந்தது உனக்குக்

கிடைக்காது.