பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தாத்தாவும் பேரனும்

தின்றதாகத் தோன்றியது. அல்லது அது வெறும் பசியாகவே இருக்கலாம். ஏனென்றால் எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் உப் பிட்ட பன்றிக் கறிப் பொரியல், நொய், முட்டை, உப்பிட்ட பன்றித் தொடை, பதனிட்ட ஸால்மன், டொரித்த மீன், காப்பி, கடல் பிஸ்கட்டுகள், இனிப்புக்காக வெல்லப்பாகு, ஒரு ஆப்பிள் ஆகியவையே. வெகு காலத்துக்குப் பிறகு, ஒரு இராணுவம் முட்டிய வயிற்றுடன் பிரயாணம் செய்தால், கடற்படை காப்பி இல்லாமலே வாழ்கிறது என அறிந்தேன். கடற் பிரயாணத்தில் * டார்ப்பிடோ நாசமாய்ப் போகட்டும் ‘ என்பதைவிட, * காப்பி நேரம் ’’ எனும் சொல் மிகுந்த முக்கியம் பெற்றதாக அமையும்.

பெரியவர்களில்-கறுப்பர் அல்லது வெள்ளையர்-எவருமே, நான் சிறுவன், இடம் தவறி வந்தவன், ஒரு தொல்லே அல்லது அதுபோல் எதுவோ என்று உணரும்படி, எப்பொழுதும் செய்த தில்லை என்பதே என் நினைவுகளில் சிறப்பாகத் திகழ்கிறது. அவர்கள் எனக்குப் பல விஷயங்கள் கற்பித்தார்கள். ஆனல் அவை எல்லாம் ஒரு சிறுவன் தெரிந்துகொள்ள வேண்டியவை தான். கழிவுப்பொருள் நிறைந்தவாளியை, காற்றடிக்கும் பக்கத்துக் கம்பிகளுக்கும் மேலாக வெளியே கொட்டக் கூடாது ; முரட்டுத் தனமான கடலில் துள்ளிக் குதிக்கும் கப்பலே, அதன் சக்கரத்தைப் பற்றி காற்றும் நீரோட்டமும் எந்தப் பக்கமாக நம்மைத் தள்ளிச் செல்கிறதோ அதற்குத் தக்கபடி கையாண்டு, செலுத்துவது எப்படி என்பது போன்ற விஷயங்களே.

காக்கைக் கூட்டின் உயரே இருந்து, அடித்தளம் வரை எந்தத் தொழிலிலும் மற்றவர்களுடன் கையோடு கை சேர்த்து நிற்கக் கூடிய தன்மையை நான் அடைந்தேன். பிற்காலத்தில் நான் க்டற் படையில் சேர்ந்ததும், க்ளோவ் முடிச்சுக்கும் போலேன் முடிச் கக்கும், சதுர முடிச்சுக்கும் கிரேன்னி முடிச்சுக்கும் உள்ள வித்தி யாசத்தை நான் புதிதாகப் படிக்க நேர்ந்ததில்லை. எப்படி துருக்கித் தலே செய்வது, தூக்கும் கயிறைப் பிடிப்பது, பிரியும் கயிற்றை இணைப்பது என்று டாம் அல்லது பீட் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தூக்கும் கருவியை முடுக்குவது, கப்பலையோ துறையையோ தகர்க்காமல் அதை வெளியேற்றுவது அல்லது கரை சேர்ப்பது ஆகியவற்றையும் நான் செய்ய முடியும்.

இவை எல்லாம் என்றாவது பயன்படக் கூடும் என்று தோன்றாது தான். ஆணுல், ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு, மோசமான ஒரு இரவில், தலைவர், துணைவர், பயில்வோன், நான் எல்லோரும் பெரிய கப்பல் ஒன்றை ஹாம்பர்கில் உள்ள றையிலிருந் வெளியேற்றி, நதியில் து. நேர்ந்தது. அப்பொழுது, மாலுமிகணமும் மற்றுமுள்ள அதிகாரி களும் குடிபோதையிலிருந்தனர். பின்புற மேலறையில் நான் மட்டும் தனியாக இரண்டு பின்புறத் துள்ளு கயிறுகளையும்,