பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

படிகளில் அத்தி மரத்தடியில் அமர்ந்து, கார்க்கில் அவற்றைச் ச்ெய்தார். மிகுந்த சிரத்தையோடு உருவாக்கினர். பிறகு சில வர்ணங்களைக் கொண்டு அவற்றுக்குச் சாயம் பூசினர். எனக்கு அவை வாத்துக்கள் போல் காட்சி தரவேயில்லே. அதை நான் அவசிடம் சொன்னபோது, அவர் எனக்கு வெகு சுருக்கமாகப் பதில் அளித்தார். -

  • ஒரு வாத்துக்கு அவை வாத்துக்கள்போல் தான் தோன்று கின்றன. பல பேரிடமுள்ள தொல்லை என்னவெனில், அவர்கள் எப்பொழுதும் எல்லாவற்றையும் தன்னலத்தோடு தான் எண்ணு கிறார்கள். நீ வருத்து வேட்டைக்குப் போவது உன்னச் சுடுவதற் கரீக அல்ல. நீதான் வாத்துக்களைச் சுடப்போகிறாய். வானி விருந்து பார்க்கையில் இவை எல்லாம் ஒரு வாத்துக்கு வாத்துக் களாகவே தோன்றும் ‘ என்று அவர் சொன்னர்,

ஏய்ப்புக்கள் அவர் மேலெல்லாம் தொங்க, தாத்தா நீரில் நடந் தார். துணியில் ஈயக் கூண்டுகள் கட்டிய கயிறுகளில் பிணைக்கப் பட்ட ஏய்ப்புகள் அவர் கைகளிலும், தோள்கள் மீதும் ஊசலிட் டன. நானிருந்த இடத்திலிருந்து சுமார் இருபத்தைந்து கெஜம் தள்ளி, அவற்றை அவர் வீசிஎறியத் தொடங்கினர். அவை தற் செயலாக இருப்பது போல் தோன்றும்படி, ஒரு இடத்தில் தனியாக ஒன்றையும், வேறு இடத்தில் இரண்டு மூன்று சேர்ந்த கும்பலாக வும், இங்கொரு ஜோடி, அங்கொரு ஜோடியாகவும் அவற்றை வீசிஞர். எல்லாம்கூடி புல் தரையைச் சுற்றித் தோன்றிய அரைவட்டமாக அமைந்தது. காற்று எங்களுக்குப் பின்னலிருந்து வீசியதை நான் கவனித்தேன். ஏய்ப்புகள், அநேகமாகக் காற்று தங்கள் முகத்தில் அடிக்கும்படியாக, நீரின்மீது குதித்து ஆடிக் கொண்டிருந்தன. -

புல் தண்டுகளைக் கீழே வளைத்து அமுக்கு. வானத்திலிருந்து பார்த்தால் படகு தெரியாமலிருக்கும்படி நின்முக மூடு. நீங் மேலே எழுந்து பார்க்காமல் படகில் அமர்ந்தவாறே கவனிக்க வசதியாக இரண்டு துளைகளும் செய்து வை. இதோ நேரே நான் அங்கு வருவேன் ’’ என்று கத்தினர் அவர்.

நான் படகில் உட்கார்ந்திருந்ததால் புல்லுக்குள்ளே ஒரு பையளுே படகோ இருப்பதை யாரும் காணமுடியாதபடி, புல் தண்டுகளை அமுக்கி மிதித்து மூடிவைத்தேன். முன்புறத்தில் இரண்டு ஆவரங்கள் செய்துவிட்டு, நான் பின்னல் அமர்ந்தேன். தாத்தா இப்போது திரும்பி * வந்துகொண்டிருந்தார். சிறிது சிறிதாக வெளிச்சம் பரவி வந்தது. நட்சத்திரங்கள் மறைந்துபோயின. மேகங்கள் திரண்டு, வெகுவாகத் தணிந்து காணப்பட்டன. காற்று குறிப்பிடத்தகுந்த வலிமை பெற்றுவிட்டது. குளிர் அதி கரித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. 2 கரிய வானிலே ஒலித்த_சிறகுகளின் மென் சரசரப்பை நன்கு கேட்க முடிந்தது. இடைக்கிடையே ஏதாவது டீல் (teal) airgi