பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம் இது

லாம். ஆனல் இதுவே எனது முதலாவது உண்மையான பெரிய வாத்து. அது விறைப்புற்று, அதன் மினுமினுச் சிறகுகள் மங்க லாக, அழகான விழிகள் மந்தமாய் ஒளி குன்றி விடும் என்று எண்ணவும் வெறுப்பாக இருந்தது எனக்கு. ஒருவனது முதல் வாத்து விசேஷ சம்பவம்தான்.

அதை நான் எப்படிச் சுட்டேன் என்பது எனக்குத் தெரியாது. நான் செய்தது என்ன வாயினும் அது என்னைப் பின்னுக்குத் தள்ளி படகை விட்டு வெளியே விழும்படி பண்ணியது என்பது மட்டும் தெரிந்தது. இனி நன்கு செயலாற்றுவேன் என உறுதி கூறினேன். இடைக்காலத்தில் என் ஊசிவாலனை வியந்து மகிழ்ந்தேன். நன்கு மலர்ந்து வந்த என் கனவுக்கு தடைபோட்டார் தாத்தா.

“ உன் சிறப்பில் நீயே ஆழ்ந்து விடாதிருந்தால், ஒரு கப்பல் மல்லார்டுகள் உன் முன்னே வந்திறங்கப் போகின்றன எனும் விஷயம் உனக்குச் சிரத்தை அளிக்கும். நீயே அதை நிர்ணயிப்பது நல்லது ‘ என்று அவர் ரகசியம் பேசினர்.

மன மயக்கத்திலிருந்து நான் விடுப்பட்டேன். ஏற்கனவே இரு -ஜன் மல்லார்ட் வாத்துக்கள் தண்ணீரில் ஏய்ப்புகளுக்கு நடுவே இறங்கியிருந்தன. ஆண் பறவைகள் இரண்டு முன்னுல் நீந்தி பொம்மைகளை நோக்கிச் சென்றன. கபிலப் புள்ளிகள் பெற்ற பெடடைகள் சில பின்தொடர்ந்தன. அவை ஆனந்தத்தால் கிளு கிளுத்து, தலையை ஊன்றி நின்றன. இன்னும் சில ஆண்களும், மேலும் சில பெட்டைகளும், நண்பர்களையும் பணம் படைத்த உறவினரையும் கண்டுவிட்டது போல, மகிழ்வோடு ஏய்ப்புகளுக்கு இடையே வந்து சேர்ந்தன. நான் தாத்தாவை நோக்கினேன். அவர் விதியைத் தகர்த்து விட்டுப் பேசினர்.

மூன்று அல்லது நான்கு வரிசையாக உள்ளன. நீ பசியோ டிருந்தால், ஏகமாய் அனைத்தையும் சுட்டு, படகை நிரப்பிக்கொள். ஆனல் நீ எவ்வளவு திறமையாகச் சுடக்கூடும் என்ற திகைப்பு உனக்கிருந்தால், இப்படி நான் சிபாரிசு செய்வேன் ; எழுந்து நின்று, ஷகு என்று கத்து, பிறகு உன் திறமையைப் பார். அது உன் இஷ்டம், பையா என்றார் அவர்.

தாத்தா என்னையே கூர்ந்து நோக்குவதாகத் தோன்றியது. எழுந்து நின்று, ஷா என இரைச்சலிடுவதே நல்லது என்று நான் தீர்மானித்தேன். அதையே செய்தேன். இரு ஆண் வாத் துக்கள் செங்குத்தாக மேலெழுந்து நீரை விட்டகன்றன. மற்றவை என்ன செய்தன என்பதை நான் காணவேயில்லை. ஆண் மல்லார்ட் வாத்துக்களால் என் கண்கள் நிறைந்து விட்டன.

தாத்தா கூறியிருந்தது போல், முதல் வாத்தின் மூக்கைப் பார்த்து துப்பாக்கியை நீட்டினேன். பிறகு அதை இரண்டடி தள்ளி வைத்து விசையை அழுத்தினேன். முதல் வாத்து மாவு மூட்டை போல் கீழே விழுந்தது. இன்னென்று வெகு உயரப்போய், திரும்பி, வேறெங்கோ பறக்க முயன்றது. அதை எவ்வளவு தூரம்