பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம் 5

தேசியக் கீதத்தில் மூன்று அடிகளை நான் கற்று விட்டேன். என் கிரேக்க மொழி உச்சரிப்பைக் கேட்டு வயிறு வலிக்கச் சிரிப்பார்: அவf. -

இன்னும் ஒரு டாக்டர், பல் வைத்தியர், தன்னில் பெரும் பகுதியை இழந்து விட்ட உலக மகாயுத்த வீரன் ஒருவன் ஆகியோரும் இருந்தனர். ஒரு போர்ச்சுகீஸியனும், ஒரு ஃபிரெஞ்சுக் காரனும், பெரிய கிழவி ஒருத்தியும் உண்டு. அவள் கால்சட்டையும் பூட்சும் அணிந்திருப்பாள். ஒரு மீனத் தவற விட்டு விட்டால் அவள் மற்ற எல்லோரையும் பார்க்கினும் மோசமாக ஏசுவான். சர்வதேசிய நபர்களுடன் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு அது தான் என்று நினைக்கிறேன். ஆனல் இச் சர்வதேசியவாதிகளில் ஒருவர் கூட, எவ்வளவு தான் பணம் கொடுத்தாலும், கெளரவ மான இடம் எதனுள்ளும் பிரவேசிக்க முடியாது. போர்ச்சு கீலியன் தன் காதுகளில் பெரிய தங்க வளையங்கள் அணிந்திருந்: தான். ஜூலை மாதம் நாலாம் தேதி தோறும் அவன் முக கூடிவரம் செய்து கொள்வான். - -

நம் துTண்டில் முறிந்து விட்டால், கடைசி வழிகாட்டியும் தண்ணீரில் போய்விட்டால், அல்லது இரை காலியாய் போனுல், யாராவது ஒருவர் முன்வந்து நமக்குத் துணை புரிவர். அவர் உபகாரம் புரிவதாகவே தோன்றாது. --

இலையுதிர் காலத்தில், அக்டோபர் இறுதியிலும், நவம்பர் முற். பகுதியிலும், மின்னுேக்களையும் மணலிலுள்ள தெள்ளுப் பூச்சி களையும் தின்பதற்காகப் பெரிய நீலமீன்கள் கரையோரமாக வருகிறபோது எவ்வளவு நேர்த்தியாக இருந்தது என்பதை உங்க ளுக்குச் சொல்லவே நான் முயற்சி செய்தேன். இப்பொழுது: எண்ணிப் பார்க்கையில், நிசமாகவே பெரிதான மீன் எதையாவது பிடித்தது, அல்லது எந்த உயிரையாவது காப்பாற்றியது, கவிதா மயமான அல்லது அலங்காரமானது எதுவும் என் நினைவில் எழவில்லை. ஆளுல் இது என் நினைவுக்கு வருகிறது-ஆண்டவன் அருள் இருக்குமானல், என்றுமே நான் போக்கடிக்க விரும்பாத தொத்து நோய் ஒன்று என்னைப் பற்றிக்கொண்டது. வரவிருக்கும் கடும் குளிருக்குத் தன்னையே தயார்படுத்திக் கொள்வது போல், மாரிகாலத்துக்காகக் குளிர்ச்சி பெற்றுவரும் தனிமை நிறைந்த கடற்கரையில் ஒருவன் அடையக்கூடிய அற்புதமான மனநிறைவு. தான் அது.

பருவகால மீன் பிடிப்புக்காக நாங்கள், காலத்தால் அடிபட்டு வெளுத்த கனமற்ற பலகைகளாலான சிறு குடில் ஒன்றை. வாடகைக்கு எடுத்திருந்தோம். கரோலினுவுக்கும் கூர்ஸ் பீச்சுக் கும் இடையே உயர்ந்து செங்குத்தாய் தோன்றிய கரைப்பகுதியில் அது அமைந்திருந்தது. அதன் முன் வராந்தாவிலிருந்து வேகமாக இறங்கினல் நேரே பாறைகள் மீது மோதவேண்டியதுதான். பாசி படிந்து பழுப்பாகத் தோன்றிய அவை உண்மையில்