பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட் @

தார். பிறகு முளைகளின் தலைகளைப் பிளந்தார். இரண்டு கன்றுகளை முளைகளுக்குள் நீளவாட்டாகத் திணித்து, கோட்ரிக் கொண்டை யினுல் அடித்து மட்டப்படுத்தினர். பின், குட்டையான இரண்டு கன்றுகளே மற்ற முளைகளுக்குள் குறுக்காகப் பதித்தார். கனமான துரண்டில் கயிற்றில் நான்கு துணுக்குகள் எடுத்து, கன்றுகளை முளைகளோடு சேர்த்து, நான்கு மூலைகளிலும் இறுக்கிக் கட்டினர். இப்படியாக, தரைக்கு மேலே ஆறு அங்குல உயரத்தில் ஒரு சட்ட்ம் அமைததாா.

அந்தப் பைன் கிளைகளை என்னிடம் தா. நான் போதும் என்று சொல்லும் வரை, கிளைகளை வெட்டி வா என என்னிடம் அவர் சொன்னுர்.

மஞ்சளாய்ப் பளிச்சிட்ட வெட்டுக் காயங்களில் பிசுபிசுக்கும் பிசினே இன்னும் வடித்துக் கொண்டிருந்த பசிய பைன் கிளேகளைத் தாத்தா சட்டங்களின் மீது பரப்பலானர். அவற்றின் முடிச்சுகள் தரை நோக்கி இருக்கும்படி செய்தார். இலையின் ஊசிகள், வீடுகள் மேலே வேயப்பட்டிருப்பது போலவே, ஒன்றின் மீதொன்றாகஇலைப் பகுதி மேல் நோக்கியும், தண்டுப் பக்கம் கீழ் நோக்கியும்வரும்படி கவனித்துக் கொண்டார். இப்படிச் செய்ய அவருக்குப் பதினைந்து நிமிடங்கள் ஆயின. ஆயினும் முடிவில், ஆறுக்கு எட்டு விசாலமான பாய்-இன்மணம் நிறைந்த பைன் கிளைகளால் ஆனது-கிடைத்துவிட்டது. பிறகு, தார் பூசிய கித்தான் பாய்த் துண்டை எடுத்து, அதன் மீது நன்கு பரப்பினர். நான்கு மூலை களிலும் சிறு சிறு கண்கள் தென்பட்டன. கிளைகளை உள்ளடக்கிய கன்றுக்ளின் தலைப்பில் கித்தான இழுத்து இறுகத் திணித்தார் அவர். அவர் பூர்த்தி செய்ததும், அதைக் கையால் குத்தினுல், அது துள்ளிக் குதித்தது. ஆயினும் உறுதியாய் இருந்தது. -

கோடரியால் கடைசித் தரமாக அடித்தபோது அவர் நன்றாய்ச் சிரித்துக் கொண்டே சொன்னர் : ‘உன் பாட்டி வைத்திருப்பதை விடச் சிறந்த பாய் இது. இனித் தேவையானதெல்லாம், நமக்குக் கீழே ஒரு துப்பட்டியும் மேலே ஒன்றும் தான். நாம் தரையை விட உயர்ந்தும், எலும்பு போல் உலர்ந்தும் இருப்போம். கன காண்கையில் நுகருவதற்கு பைன் மணம் வே - இரண்டு பெரியவர்களும் ஒரு பையனும் படுப்ப மlான அளவு பெரிதாக உள்ளது. இது *:::3% துறங்க வேண்டும். அவன் உருண் விடவோ கூடாது.”

அவர் பேசி முடித்தபோது, நான் முடித்த சமயத்தில், டாமும், பீட்டும் இதே ல் தங்களுக்கென ஒரு படுக்கையை மற்றாெரு கூடாரத்தில் அமைத்து விட்டார்கள். காரை நிறுத்தியது முத்ல், இரண்டு கூடாரங்களையும் படுக்கி களையும் தயாரித்தது வரை, எல்லா வேலையும் உருவாவதற்கு அரை மணி கூடப் பிடிக்கவில்லை. .