பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

கணவானைக் கனவானே காண்பார்

திாத்தாவுக்கு அநேகமாக எல்லாம் தெரியும். அதை அவர் அவ் வளவாகப் பாராட்டுவதில்லை. நான் சொல்ல விரும்புவது இது தான் : அவர் சிறுவனக இருந்தபோது ஒரு தடவை ஆப்பிரிக்கா வுக்குப் போனார் ; இந்தியாவில் ஒன்றிரு புலிகளைச் சுட்டார் : அவர் அப்படித்தான் சொல்கிறார். இங்கும் அயலிடங்களிலும், நிகழ்ந்த யுத்த களேபரங்களில் கலந்து கொண்டார். ஆயினும், இரவு நேரத்தில் காடைகள் ஏன் வட்டமாக நெருங்கி நின்று துரங்குகின்றன, ஏன் வான்கோழிகள் சதா மேடு நோக்கிப் பறக் கின்றன என்பதையும் அவர் இப்போதும் சொல்வது.இடு.

தாத்தா பார்ப்பதற்குப் பிரமாதமானவர் அன்ர்ே. அவர் காதுகள் பெரிதாய் வெளியே தொங்கிக்கிடக்கும் , குச்சி குச்சி யான மீசையில் புகையிலையின் வெளிர் மஞ்சள் கறை படிந்திருக் கும் ; கோணி வளைந்த குழாயில் புகை பிடிப்பார். அவரைப் போலவே அடிபட்டுப் பழசாய்ப்போன குழல் துப்பாக்கியால் வேட்டையாடுவார். அவர் கால் சட்டை சுருங்கி மடிந்திருக்கும். முதியோர் பலர் இனிப்புப் புகையிலையைச் சுவைத்த காலத்தில் செய்து வந்தது போல் தான் அவரும் வெகு நேராக எச்சிலேத் துப்புவார்’ - -

தாத்தாவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் அறிந் தவை பற்றி மனம் உவந்து உரையாடுவது தான். விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிற சின்னப் பையனை-அதாவது என்னை -அவர் மட்டம் தட்டுவதே இல்லை. நீரும் தாத்தா மாதிரி வயோ திகராகி விட்டால், உமக்கும் மறந்துவிடும் அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்திருக்கும். நெடுங்காலமாக அவை உம்முள் உமது ஒரு பகுதியாக உறைந்துகிடப்பதே காரணம். சிறுவன் ஒருவன் உலகத்தில் அடி எடுத்து வைக்கும்போது உம்மைப் போல் சிரமப்படுவதில்லை என்பதை நீர் மறந்துவிடுகிறீர், அனுபவ அறி வைப் பரப்ப நீர் ஆவன செய்வதில்லை. ஏற்கனவே நீர் அறிந்து மறந்தவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள மற்றவர்கள் ஆவலாக இருப்பர் என்பதையும் நீர் மறந்துவிடுகிறீர்.