பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட் 7.தி.

வேளியாய், தடைகளற்று இருந்தன. அங்கங்கே சில மினுமினு: பெர்ரிகளும், கசப்பு பெர்ரிச் செடிகளும் தான் காணப்படும். ஹ9-ஹ9 எனும் சப்தம் கனத்து பலம் பெற்று வந்தது. நாய்கள் உறுமின, குரைத்தன. அவ்வப்போது ஊ-ஊ என நெடுமூச் செறிந்தன. செடிகள் சுழலிடும் ஒசை நிலையாக வந்து கொண் டிருந்தது. - #

அந்த ஒசையை எழுப்பியது எது என்பதை நான் காண முடிந்தது. அது ஒரு ஆண் மான். பெரியது. தாழ்ந்த செடி களுடே அது உறுதியாகவும் கடுமையாகவும் ஓடி வந்தது. அதற்குக் கொம்புகள் இருந்தன-ஆண்டவனே, அவை கொம்புகள் தான காய்ந்த மரம் ஒன்றை அதன் தலைமேல் வைத்துக் கட்டி உயிருப்பதாகத் தோன்றியது எனக்கு. நான் துப்பாக்கியின் கொக்கியை விலக்கினேன். அசையாதிருந்தேன். மான் நேராக என்னை நோக்கி வந்தது. அதன் பின்னல் நாய்கள் வெறியோடு ஒடி வந்தன.

மான் நீரோரமாக வந்தது. அது ஐம்பது கெஜங்களுக்குள் வந்ததும், நான் எழுந்து நின்று துப்பாக்கியை என் முகத்துக்கு நேரே உயர்த்தினேன். அது வந்து கொண்டே இருந்தது. நானும் அதை வரவிட்டேன். இருபத்தைந்து கெஜம் இருக்கையில் அது என்னைப் பார்த்து விட்டது. மூக்கால் சீறியது. அதன் இடப்பக்கம் துள்ளியது, அதனுள் யாரோ வில்விசை ஒன்றை முறித்து விட்டது போல். இது ஒரு மான் என்பதை நான் மறந்தேன். ஒரு வாத்தை அல்லது கள்டையை முன்னுக்கிழுத்துச் சுடுவது போலவே அதையும் சுட்டேன்.-அதன் தோளுக்கு முன்புறம் குறி வைத்தேன்.

துப்பாக்கி விசையை அழுத்தினேன். என்ன காரணத் தினலோ அமுக்கு குழலில் வெடி தீர்த்தேன். மான், பாய்ச்சலின் நடுவே, தரையிலிருந்து அது ஆறடி உயரத்திலிருந்த போது, குண்டு அதைத் தாக்கியது. அதல்ை மான் இருபது கெஜம் தள்ளிப் புதருன் பாய்ந்து, என் வாழ்விலிருந்தே மறைந்து போயிருக்க வேண்டும். துப்பாக்கி பூம் என்றது ; ஆனால் நான் அதைக் கேட்க வில்லை. துப்பாக்கி உதைத்தது ; ஆனால் நான் அதை உணரவில்லை. தான் பார்த்ததெல்லாம், எனக்காக ஆகாய விமானம் ஒன்றைச் சுட்டுக் கொண்டது போல இந்த பயங்கரப் பிராணி வானத்தி விருந்து கீழே வந்து விழுந்ததைத் தான். அது முற்றிலும் புரண்டு. முதுகின் மேல் விழுந்து கிடந்தது. அசையவே யில்லை.

நாய்கள் மூர்க்கமாய் வந்து, அதைப் பற்றத் தொடங்கின. ஆளுல் அவற்றுக்கு அறிவு இருந்ததால், மானுக்கு அதிகப்படியான பறிப்பு தேவையில்லை என உணர்ந்து விட்டன. அமுக்குக் குழாயில் இருந்த முதல்தர மான் குண்டில் மூன்று அவுன்சுகளை எறிந்து நான் அதைச் சரியானபடி பிடித்து விட்டேன். அதன் தோளைக் காயப் படுத்தினேன். கழுத்தில் வெடிப்பு உண்டாக்கினேன். அதன் இருதயத்தின் மத்தியில் சுட்டுவிட்டேன். அதன் தோளில் உள்ண்