பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட்

தான் என்று எனக்குத் தோன்றியது. அது எவ்வளவு அழகாக இருந்தது, அதற்காக நான் எவ்வளவு அனுதாபப்பட்டேன் என்று. எண்ணி என் உள்ளம் சிறிது கசிந்தது. அது வெறும் பிரதிபலிப்புஇருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு நான் முதலாவது தடவை: யாக ஆஃபிரிக்க எருமையைச் சுட்டபோது ஏற்பட்ட நோய். போன்ற்துதான் என யூகிக்கிறேன். -

நான் தொடர்ந்து மானேயும் நாய்களையும் தட்டிக் கொண் டிருந்த போது, டாமும் பீட்டும் ஒரு வழியாயும், தாத்தாவும் மிஸ்டர் ஹோவர்டும் மற்றாெரு வழியாகவும் வந்து சேர்ந்தார்கள். நாம் சிறுவனுக இருக்கையில், நான்கு பெரிய நன்கு வளர்ந்த மனிதர்கள்-சின்னப் பையன் பார்வையில் எல்லாம்ே பென்னம் பெரியன தான்-காட்டினுள்ளிருந்து கூச்சலிட்டபடி ஓடி வந்து, நமது மகத்தான முதல் வெற்றியின் அருகிலே நாம் உட்கார்த்தி ருப்பதைப் பார்க்கிற அனுபவம் இருக்கிறதே அது அற்புதமானது தான். ஸ்மக் (தன் பெருமையில் தானே ஆழ்ந்த மகிழ்ச்சி), என்பது பிற்காலத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு வார்த்தை. அவ்வேளையில் நான் பெற்ற உணர்வை ஸ்மக் என்று குறிப்பிடு வது மிகவும் மிதமேயாகும். .

தாத்தா, சிரிக்காதிருக்க முயன்றவாறே, நல்லது ‘ என்றார்.

நல்லது ”” என்று மிஸ்டர் ஹோவர்ட்டும் சொன்ஞர். ‘’ பையன் அவனுக்காக, கொம்பு உள்ள குதிரை ஒன்றைச் சுட்டுவிட்டான் ’’ என்று பீட் சொன்னன். நான் கள்ளச் சாராயம் காய்ச்சக் கற்று விட்டது போல் அவன் எனக்காகப் பெருமை, கொண்டான். .”

அதை நேர்த்தியாகவும் சுட்டிருக்கிருன். மான் அசையாமல்

திடீரென்று விழித்துக்கொண்டு, தற்காப்புக்காக அதைச் சுட்டிருப் பான் ‘ என்று டாம் கூறினன்.

அப்படி ஒன்றுமில்லை ‘ என்று சொல்ல நான் வாயெடுத் தேன். ஆனல் அவர்கள் நால்வரும் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். -

மான் தாவிய இடத்திலுள்ள அழுத்தமான வடுக்களை அவர்கள் ஏற்கனவே ஆராய்ந்து விட்டார்கள். அது பாய்ந்த நிலையிலேயே தர்ன் அதைச் சுட்டிருக்கிறேன் என்பதை அவர்கள் அறிவர். பிறகு, பீட் மானேத் திருப்பிப்போட்டு அதன் வயிற்றைக் கிழித்தான். அதன் அடிவயிற்றை வெளியே இழுத்து, கிறித் திறந்தான். அதில் பச்சைப் பொருள் நிறைந்திருந்த்து படுமோசமாய் நாற்ற மடித்தது. அவர்கள் நால்வரும் பெரிதாகக் கூச்சலிட்டு, என்னேட் பிடித்துக் கொண்டார்கள். பீட் அதன் அடிவயிற்றைப் பற்றி யிருக்க, மற்றவர்கள் என் தலையை அதற்குள்ளே-ரத்தம், குடல், பச்சைப் பொருள் எல்லாவற்றினுள்ளும்-திணித்தார்கள். நான் நுகர்ந்த நாற்றங்களில் எல்லாம் மகாமோசமான நாற்றம் அது