பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே 37

அம்புலி உயரத்திலேயே இருந்தது. நட்சத்திரங்கள் இன்னும் ஜொலிப்புடன் விளங்கின. காலை மணி நான்குதான் ஆயிந்து. விழித்தெழுவதற்கு பயங்கரமான வேளையே அது. கனடர்வில் கிறிஸ்துமஸ் நாள் எவ்வளவு குளிராக இருக்குமோ அவ்வளவு குளிரடித்தது இங்கும். நாங்கள் ஒரு கப் காப்பி மட்டுமே. குடித்திருந்தோம். -

“ அப்பா இளையவனே, நீ என்னையும் பீட்டையும் டாமையும். பின் தொடர்ந்து வந்து, நாங்கள் செய்வதையே செய்யவேண்டும். உன் வாயைத் திறவாதே. காய்ந்த குச்சிகள்மீது காவடி வைக்காதே. நாங்கள் உட்காரும்போது உட்கார்ந்து, நான் உன் கையில் குத்தியதும் சுட்டுவிடு. இவ்வளவுதான் நான் உன்னிடம் கேட்பது. எதைச் சுடவேண்டும் என்பது உனக்கே தெரியும் . என்று தாத்தா சொன் ஞர். -

இருண்ட காட்டினுாடே, பழகிய மான் தடம் ஒன்றில் எச்சரிக்கையோடு நடந்து, நாங்கள் முன்சென்றாேம். முதலில் டாம், பீட் இரண்டாவதாக, அப்புறம் தாத்தா, முடிவில் நான். இப்படி சுமார் கால் மைல் தூரம் நடந்து, சிறு காட்டுவழி ஒன்றை: அடைந்தோம். அது பெரிய ரஸ்தாவிலிருந்து ஆயிரம் கெஜம். விலகியிருந்தது. அதைச் சுற்றிலும் செடிகள் அடர்ந்து நின்றன். ரஸ்தாவிலிருந்து விலகிச் சென்ற பகுதியில், தொலைவில், சந்தேகத்துக்குரிய தோற்றத்தோடு புதர் ஒன்று மண்டிக்கிடந்தது. அது இதரச் செடிகளைப் போலில்லே. பீட்டும், டாமும், தாத்தாவும் அதில் மறைந்தார்கள். நானும் பின்சென்றேன். அது வசதியான மறைவிடம் தான் ; நான்கு துப்பாக்கியாட்கள் தங்குவதற்குப் போதுமான அகலம் பெற்றிருந்தது. கண்களால் பார்ப்பதற்குச் சிறு கீறல்கள் செய்யப்பட்டிருந்தன. வெளியே துப்பாக்கியை: நீட்டுவதற்குத் தகுந்த அளவு பெரிதாக அவை விளங்கின. இன்னும் இருள் நீடித்தது ; குளிர் நிலவியது. வெறும் பழுப்புப் பைன் ஊசி இலைகள் மீது, நடுங்கும் உடல்களோடு நாங்கள் இருந்தோம். -

தாத்தா மெல்லிய குரலில் பேசிஞர் நரை வெளிச்சம் பரவியதும் வான்கோழிகள் சிலவற்றை நீ காண்பாய். அவை பறந்து வந்து, மரங்களில் இறங்கி, சுற்று முற்றும் பார்க்கும் : பிறகு கீழே வரும். காலையில் அவை அதிகமாக அப்படிச் செய்வதில்லை. ஆனல் நான் வான்கோழியை என்றும் நம்புவதே கிடையாது. அன்வி எப்பொழுதும் உன்னை விடச் சுறுசுறுப் புள்ளவைதான். அநே க ம |ாக அவை நடக்கலாம். சிறு கும்பலாக வந்தால், அவற்றிடையே ஒரு ஆணும், மூன்று. நான்கு, ஐந்து பெட்டைகளும் இருக்கலாம். அது பெரிய கூட்டமானல், ஒன்றுக்கு அதிகமான ஆண்களும், ஏகப்பட்ட பெட்டைகளும் இருக்கும். உனக்கு அருகில் உள்ளவற்றில் மிகப் பெரியது எதுவோ அதையே,-தான் உன்னைக் குத்திய உடனே, அதற்கு