பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவானக் கனவானே காண்டார்

“இச் சிறு காடை ஒரு கனவான் ஆகும். கனவான் கனவான அணுகுவது போல் தான் நீயும் அதை நெருங்க வேண்டும். அதைப் போற்றிக் கவனித்து, அதன் அளவில் அது உயர்ந்ததே என்பதை நிலைநிறுத்த வேண்டும். ஏனெனில் இந்த இனப் பறவை மிக அதிகமில்லை. மரியாதையோடு சுடப்படுவதற்குத் தகுதி வாய்ந்தது. இது. காடையை நீ எவ்விதம் கையாள்கிருயோ அதன் பலன் உனக்கும் கிட்டும். - * . . . .

“இப்படி எண்ணிப் பார். காடைக் கூட்டம் உன் குடும்பத்தில் ஒரு அங்கம். அதை நீ நன்கு கவனித்தால் அது உன் ஆயுள் காலம் பூராவும் அதே இடத்தில் வசிக்கும். உன் தோட்டத்தில் நெடுகிலும் வேலை செய்து, பூச்சிகளைப் பிடித்துத் தின்னும், மாலை வேளைகளில் சீட்டி அடித்து உன்னை உற்சாகப்படுத்தும். உன் நாய் களுக்கும் மகிழ்வளிக்கிறது, அவை விளையாடுவதற்கு ஏற்றனவாக அமைவதால். அதை வேட்டையாடும் போது, போதுமான அளவு, சுடுவதோடு நிறுத்திவிட வேண்டும். அப்பொழுது தான் அடுத்த, வருஷம் புதிய கூட்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பறவைகள் எஞ்சும். ஆணியில் கிடக்கும் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு, நாய்களை அழைத்தவாறே நிச்சயமாகக் கண்ணில் படும் என்ற உறுதியோடு காடைக் கூட்டத்தைத் தேடிச் செல்வது போன்ற இனிய விஷயம் வேறு எதுவுமே கிடை யாது. இச் சிறு பறவை அஞ்சு அவுன்சு கணம் கூட இல்லே. ஆளுல் அதன் ஒவ்வொரு அவுன்சும் தனித் தரம் உடையது. சாட்டையைப் போல் வேகம் பெற்றது. அது. அதற்கு எதிராகப் போகிற ஒவ்வொரு சமயமும் உனது தன்மையை நீயே நிரூபித்துக் கொள்கிறாய். - -

காடை பிடிக்கப் போய் முன்னைவிட அதிகமான மரியாதை உணர்வு கற்றுத் திரும்பாத மனிதன் எவனையும் நான் கண்டதில்லை. கனவான்களோடு சேர்ந்து பழகுவது உனக்குத் தீங்கு பயக்காது. காடை வேட்டையாட எண்ணினுல், சில விஷயங்களை-நாயின் முன்னுல் முயல்களைச் சுடக்கூடாது என்பது போன்றவற்றை-நீ மறக்கவே கூடாது. இல்லையெனில், காடையிடமிருந்து நாயின் கவனத்தைத் திருப்பி விடுவாய். .

‘அப்புறம் நாய்களைப் பற்றியும் சிறிது கவலைப்பட வேண்டும். ஒரு இடத்தில் பின்தங்கி நிற்காத- மற்றதை கெளரவிக்காத என்பதே சரியான பதம்-நாய், மற்றாெரு நாய்க்கு விட்டுக் கொடுக்காத நாய் பயனற்றது தான். அதை நீயே சுட்டுக் கொன்று விடலாம். இவ்வுலகில் உள்ள தொல்லைகளில் ஒன்று என்னவென்றால், ஒவ்வொருவரும் முட்டிமோதி இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். உன் நாய்க்கு நல்லொழுக்கம் எதுவு. மில்லாது போனல், அது நாயாக இருக்கவே அருகதையற்றது. - முயல்கள்ைத் துரத்திக் கொண்டு ஒடும் நாய்க்கும் இதே வழி: தான். அது வேட்டை நாயாக இருந்தால், முயல்களைத் துரத்த