பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


டர்களில் ஒருவருக்குக் கூடக் காயமில்லை.

அதே இரவில் கப்பர் ஒயிட் படை வீடுகளும் வேறு தொண்டர்களால் தாக்கப்பட்டன. ஆனால் அங்கு போலிஸார் பணியவில்லை.

பத்திரிகைகளில் இவ்விஷயங்களைப் பற்றி உண்மையான விவரங்கள் வெளிவருவதேயில்லை. தொண்டர்கள் வெளிவந்து தாங்கள் செய்த வீரச்செயல்களை வெளியிட சூழ்நிலை பக்குவமாயில்லை. போராட்டத்தில் தப்பிப்பிழைத்த போலிஸாரே தங்களுக்கே தெரிந்த விஷயங்களை வெளியிட்டு வந்தனர். அவர்கள் தங்கள் இலாகாவுக்குக் கேவலம் ஏற்படாதவாறு, விருத்தாந்தங்களைத் திரித்தும், மாற்றியும், புதிதாய்ச் சிருஷ்டி செய்தும் கூறிவந்தார்கள் தாக்கிய தொண்டர்கள் 30பேர் என்றால் 300க்கு மேற்பட்டவர் வந்திருந்ததாக போலிஸார் கூறுவர். ஏனென்றால் 30பேருக்கு அவர்கள் தோற்றனர் என்பது கேவலமல்லவா மேலதிகாரிகள் இதைக் கேட்டு அவர்களைக் கண்டிக்கவும் கூடும். சில பத்திரிகை நிருபர்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைப்பினும் அவர்கள் சர்க்காருக்குக் கேவலத்தையுண்டாக்கும் விஷயங்களை வெளியிட அஞ்சினர். வெளியிட்டால் நள்ளிரவில் பிளாக் அண்டு டான் படையினர் அவர்களை வாட்டி வருத்துவர். அதனால் அவர்கள் செய்தி எழுதுகையில் 'தொண்டர்கள் காயமடைந்தனர்; சிலர் இறந்து வீழ்ந்தனர்' என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சில தொண்டர்கள் இறந்திருக்கும் பொழுது, அவர்களுக்கு அவ்விஷயமே தெரியாது போய்விடும்!

அடுத்தாற் போல் தான்பிரீன் கூட்டத்தார் தாக்கிய இடம் ஹால்லி போர்டு. அது திப்பெரரித் தாலுகாவின் வடமேற்குப் பக்கத்திலுள்ளது. அங்கிருந்த போலிஸாரும் தொண்டர்களிடம் சரணாகதியடைந்து, ஆயுதங்களைப் பறிகொடுத்தனர். அங்கு அந்த போராட்டத்தில் தலைமை வகித்தவர்கள் டிரங்கனில் தலைமை வகித்த தொண்டர்படை அதிகாரிகளேயாவர்.

ரியர் கிராஸ் என்னுமிடம் அடுத்தாற்போல் தாக்கப்பட்டது. அங்கு போராட்டம் மிக உக்கிரமாக நடைபெற்றது. முடிவில் தொண்டர்கள் போலிஸாரை முடியடிக்காமலே திரும்ப நேர்ந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பல இடங்களிலிருந்து தொண்டர்கள் உதவிக்கு வந்திருந்தனர். ஸீன் டிரீஸியும், தான்பிரீனுமே தலைமை வகித்து நின்றார்கள். போலிஸாரும் உயிரை வெறுத்துத் தீவிரமாக போராடினார்கள். அவர்கள் எறிந்த வெடிகுண்டுகளின் சில்லுகள் ஒ மல்லி, ஜிம் கோர்மன், டிரீவி, தான்பிரீன் முதலியோரைச் சிறிது காயப்படுத்தின. தொண்டர்கள் படை விடுகளைத் தீ வைத்து எரித்தார்கள். பல பகைவர்கள் தீயில் வெந்தனர். இருவர் சுடப்பட்டு இறந்தனர்.

109