பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ஆனால் அங்கு தாமதித்திருப்பது அபாயம் என்பதையுணர்ந்து மெய் வருத்தத்தையும் மெலிவையும் பொருட்படுத்தாது எப்படியாவது தப்பிவிடலாம் என்று அவன் தைரியங்கொண்டு எழுந்தான்.

தப்பிச் செல்வதற்கு வழி தேடிக்கொண்டிருக்கையில் பல வெடி குண்டுகள் நாற்றுக் கூடத்திற்குப் பக்கத்தில் வெடித்தன. அவன் தைரியத்தைக் கைவிடாமல் மெதுவாகச் சென்று அருகேயிருந்த தாழ்ந்த தோட்டச்சுவரைக் கண்ணுற்றான். அறிஞர் கரோலன் ஆதியிலேயே அந்தச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். அது ஆபத்திற்கு உபயோகமாயிருந்தது. நாற்றுக் கூடத்திற்கு அருகே தோட்டத்தில் இரண்டு படை வீரருடைய பிரதேங்களைத் தான்பிரீன் கண்டான். அவற்றிலிருந்து டிரீஸி அந்தப் பாதையின் வழியாகவே சென்றிருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால், டிரீஸி அங்கே தப்பியிருந்தாலும் தோட்டத்தின் மத்தியிலே கொல்லப்பட்டிருந்தல் கூடும் என்றும் அவன் சந்தேகித்தான்.

அவன் சுவரின் அடியில் சென்றவுடன் சுவருக்கு மறுபக்கத்திலிருந்து ஒரு சிப்பாய் மெதுவாகத் தலை நீட்டினான். சிப்பாய் துப்பாக்கியை அவனுக்கு நேராக வைத்துக்கொண்டு குறிபார்த்து, 'யாரது? நில் அங்கே! என்று உத்தர விட்டுச் சுட்டான். அந்தக் குண்டு குறிதவறிப்போய் விட்டது. உடனே தான்பிரீனும் பதிலுக்குச் சுட்டுவிட்டுச் சுவரிலேறி மறுபுறம் குதித்தபோது அந்தச் சிப்பாப் கீழே சுருண்டு கிடந்ததைக் கண்டான்.

வேறொரு சிப்பாய்க் கூட்டத்தார்.அப்பால் நின்று கொண்டு அவனைக் குறி பார்த்துச் சுட்டனர். அவன் தன் துப்பாக்கியை அவர்களுக்கு நேராகப் பிடித்துப் பல குண்டுகளை மழையாகப் பொழிந்துகொண்டே, அடுத்த தோட்டத்திலிருந்த மற்றொரு சுவரையும் தாண்டி வெளியே தெருவில் குதித்தான். அவன் குதித்ததுதான் தாமதம். எங்கிருந்தோ ஒரு ராணுவக்கார் வேகமாய் வந்து அவன் அண்டையில் நின்றது. அதிலிருந்தவர்களும் அவனைப் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். தான்பிரீன் உயிரை வெறுத்து நின்றதால், காரிலுள்ளவர்கள் நன்றாய்க் குறிபார்க்கு முன்பே எதிர்த்துச் சுடலானான். காரிலிருந்த ஒரு சிப்பாய் குண்டு பட்டுச் சாய்ந்தான். தான்பிரீன் வெகு வேகமாய் ஓடிப் பகைவரின் குண்டுகள் தன்னுடம்பில் பாயாதவாறு தப்பி மறைந்து கொண்டான். குண்டுகள் நாலா பக்கத்திலும் பறந்து கொண்டிருந்தனவேயன்றி அவன்மேல் படவில்லை; சுவர்களிலும் மரங்களிலுமே பாய்ந்துகொண்டிருந்தன. தான்பிரீன்தான் நின்ற தெரு கரோலனுடைய வீட்டுக்கும் டிரம்கொண்டரா பாலத்திற்குமிடையேயுள்ளது என்று கண்டான். அவ்வழியே சென்றால் ஆங்காங்கே நிறுத்தப்படிருந்த பட்டாளத்தாருடைய கையில் சிக்கும்படி நேரும் என்பதை உணர்ந்து, வலது பக்கமாய்த் திரும்பிச் சென்றான். சிறிதுதுரத்தில் செயின்ட் பாட்ரிக் கலாசாலை யிருந்தது. அதன் முன்புறத்தில் சுமார் 18அடி உயரமுள்ள பெரிய சுவர் உண்டு. அவன் அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால், சிப்பாய்களின் வலையில் அகப்படாமல்

127