பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


யாதொரு யோசனையுமில்லாமல், அவன் திடீரென்று சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். அன்றிரவு அவன் எந்த வீட்டைத் தட்டியிருந்தாலும், அவன்பாடு அன்றோடு தீர்ந்து போயிருக்கும். அந்நேரத்தில் (காலை 3 அல்லது 4 மணிக்கு) தலைவிரி கோலமாய், உடம்பெல்லாம் இரத்தம் பெருகி, உடை யெல்லாம் நனைந்து, அவன் நின்றுகொண்டிருந்த நிலையை யார் கண்டாலும் திடுக்கிட்டு போயிருப்பர்.

எந்தத் தெய்வமோ வழிகாட்டியது என்று சொல்லும்படியாக, அவன் அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.

ஒரு முறை தட்டியதில் ஒருவரும் ஏனென்று கேளாததால், அவன் மீண்டும் தட்டினான். ஒரு மனிதர் வந்து கதவைத் திறந்து எதிரே நின்று கொண்டிருந்த் உருவத்தைக் கண்டார். தான் பிரீன் மெய்மறந்த நிலையில், வாய் குழறிக் கொண்டே தனக்குத் தங்க இடம் வேண்டுமென்று வேண்டினாான். அவ்விட்டுக்காரர் அவனை யாரென்றும், எவ்வாறு காயமுற்றான் என்றும் கேட்க வில்லை. உள்ளே வாருங்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யக் காத்திருக்கிறோம் என்று வரவேற்று உள்ளே அழைத்தார்.

அவரும் அவர் மனையும் தான்பிரீனைப் படுக்கையில் படுக்கவைத்து, உடனே அருகே வசித்துக்கொண்டிருந்த லாங் என்ற தாதிப்பெண்ணை அழைத் துவந்தனர். அவர்கள் அவனுடைய புண்களுக்கு மருந்திட்டு, உற்சாகமளிக்கும் பானமொன்றையும் குடிக்கக் கொடுத்தனர். அந்தப் பானம் தாதிப் பெண்ணால் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்டது.

தான்பிரீனை ஆதரித்து வீடு கொடுத்து உதவிய கணவான் பிரெட் ஹோம்ஸ் என்பவர். அவருக்குப் புரட்சியில் அபிமானமில்லாததோடு ஆங்கிலேயரிடமே அனுதாபமுண்டு. ஆயினும், அவரும் அவர் பத்தினியும் தான்பிரீனைத் தங்கள் சொந்தப்பிள்ளையைப் போலும், சகோதரனைப்போலும் பாவித்துச்சிகிச்சை செய்தனர். தான்பிரின் தனக்குக் காயங்கள் எப்படியேற்பட்டன என்பதைச்சொல்லாம லிருப்பினும், அவர்கள் வேண்டிய உபசாரம் செய்து உயிரைக்காப்பாள்றினர்.

நன்றாக விடிந்த பிறகு தான்தான்பிரீன் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். ஹோம் அவனைத் தேற்றி நன்றாகக் குணமடையும்வரை தாங்கள் பாதுகாப்பதாயும், பின்னால் வேறு பந்தோபஸ்தான இடத்திற்கு அனுப்பி, வேண்டிய உதவி செய்வதாயும் வாக்களித்தனர்.

மறுநாள் தோழர்கள் தான்பிரீனை ஒரு காரில் வைத்து, மேட்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் சென்றனர். வழியில், சார்லஸ் தெருவில் டிர்லி அவனைக் கண்டு உயிர்தப்பிவந்த விபரத்தைச் சொன்னான்.

123