பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி



அன்று, மாலை மைக்கேல் காலின்ஸ் தான்பிரீனைக் காணச் சென்றார். உடனேயே தான்பிரீன், 'டிரீஸி எங்கே?' என்று முதலாவதாகக் கேட்டான். உள்ளதைச் சொன்னால் அவனுடைய புண்கள் ஆறுவதற்கு இடையூறாயிருக்குமென்றும், அவனுடைய மனம் முறிந்து போகும் என்றும் கருதி, 'அவன் நாட்டுப்புறத்துக்குப் போயிருக்கிறான், ' என்று காலின்ஸ் கூறினார்.

பத்து நாட்களுக்குப் பின்பு தான்தான்பிரீனுக்கு முழுவிவரம் தெரியும். பிரிட்டிஷார் டிரீஸியின் பிரேதத்தைக் டால்பட் தெருவிலிருந்து படைவீடுகளுக்குக் கொண்டு போய்ப் பரிசோதனை செய்து விட்டு, அதை அவனுடைய நண்பர்களிடம் அெகாடுத்தனர். பிரேதம் டிரீஸியின் சொந்த ஊரான திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டு, ராஜாக்களும் கண்டு பொறாமைப்படக்கூடிய முறையில் கெளரவிக்கப்பட்டது. திப்பெரரி வாசிகளில் எவனுக்கும் அவ்விதமான மரியாதைகள் செய்யப்பட்டதில்லை. பல மைல் நீளமுள்ள பெரிய ஊர்வலத்துடன் பிரேதம் கல்லறைக்கு எடுத்துச் செல்வப்பட்டது. டிரீஸியின் இறந்த உடலைக் கண்டும் அஞ்சுவது போல், பிரிட்டிஷாருடைய துருப்புக்கள் ஆயுதம்தாங்கி வழிமுழுவதும் நின்று கொண்டிருந்தன. அன்றையதினம் தென் திப்பெராசிப் பிரதேசம் முழுவதும் துக்கத்தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று அழுது கண்ணீர் பெருக்காத ஜனங்களேயில்லை. டிரீஸியின் சமாதி கில்பிக்கின் என்னுமிடத்தில் இருக்கிறது. அது பிற்காலத்தில் ஐரிஷ் ஜனங்கள் யாத்திரை செல்லும் புனித ஸ்தலமாகி விட்டது!

மேட்டர் ஆஸ்பத்திரியில் வைத்தியர்களும் தாதிகளும் தான்பிரீனுக்குச் செய்துவந்த உபசாரத்திற்கு அளவேயில்லை. அக்காலத்தில் குண்டுப்பட்டுக் காயமடைந்துவர்கள் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுவரப்பட்டால், உடனே வைத்தியர்கள் டப்ளின் மாளிகைக்குத் தகவல்கொடுக்க வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவின் மூலம் தான்பிரீன் போன்ற நபர்களைப் பிடித்துவிடலாமென்று அவர்கள் மனப்பால் குடித்து வந்தனர். ஆனால் வைத்தியர்கள் தங்களுடைய அரசியல் கொள்கை எப்படியிருந்போதிலும், சர்க்காருடைய உத்தரவை நிறைவேற்றுவதில்லை. அது அவர்களுடைய பெருந்தகைமை.

அடுத்த வெள்ளிக்கிழமையன்று தான்பிரின் மேட்டர் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினான். சில நபர்கள்.அவனை நகரின் தென்பகுதியிலிருந்த வேறொரு வைத்தியப் பெண்ணினுடைய வீட்டுக்குக் கொண்டுபோனார்கள். ஆஸ்பத்திரியில் மேற்கொண்டு தங்குவது அபாயமாய்ப் போய்விட்டது. புதிய வீட்டில் அவன் குணமடைந்து சிலநாட்களில் எழுந்து பக்கத்தில் நடமாடக்கூடிய வலிமையும் பெற்றான். அவனை வேறிடத்திற்கு அழைத்துப் போகவேண்டிய அவசியமேற்பட்டது. பாரி அம்மையின் விட்டில் அவனுடைய சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரண்டு மூன்று தினங்களில் அந்தத் தெருவையும் பட்டாளத்தார் சோதனை இட்டனர்.

134